--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க இயற்கை எய்தினார்

இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார். 1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவு சமூக நல திட்டங்களில் இராணுவமும் கைகோர்ப்பு

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சமூகநல திட்டங்களில் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அண்மையில் முல்லைத்தீவில் உள்ள மன்னங்கடல் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவு தடியமலை - முத்தயங்காடு வீதி இராணுவத்தினரால் புணரமைப்பு

முல்லைத்தீவில் உள்ள  தடியமலை - முத்தயங்காடு வீதியை புணரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

1758 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வெலிகமை, பொல்வதுமேதர கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 219.8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அன்டனோவ் - 32 ரக மூன்று விமானங்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு

மாற்றியமைக்கும் செயல்முறை நிறைவு செய்யப்பட்ட இலங்கை விமானப்படைக்கு  சொந்தமான மூன்று அன்டோனோவ் -32 ரக விமானங்கள் நேற்று (ஜூன் 11) மாலை நாடு திரும்பியுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாவனைக் உட்படுத்த முடியாத வாகனங்கள் கடலுக்கடியில்

இலங்கை கடற்படையின் உதவியுடன் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (ஜூன் 11) நெடுந் தீவில்  கடல்வாழ் உயிரியல் பல்வகைமை செயற்கையாக விருத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ள அனர்த்த எச்சரிக்கை தளர்வு

ஜூன் 3ம் திகதி  முதல் 6ம் திகதி வரை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ  பிரிவு வழங்கிய வெள்ள அனர்த்த  எச்சரிக்கைகள் இன்றைய தினம் முதல் தளர்த்தப் படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10 , 11 ல் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சிரேஷ்ட பிரஜைகள் தமது ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் முப்படையினரால்விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

75மிமீ க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கம்பஹா வெரெளவத்தையில் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

கடற்படையினரால் கம்பஹா, வெரெளவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்  650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் (ஜூன், 7) திறந்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் படையினரின் நடவடிக்கைகள்

கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசரகால நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் ஆய்வு

தீ அனர்த்தத்திற்கு உள்ளன எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றனவா என்பன தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் இலங்கை கோரிக்கை

காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413 என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்பு

மாவனெல்லை, தெவனகல பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களனி கங்கை கரையோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் அடுத்த 6 முதல் 16 மணி நேரத்திற்குள் ஹன்வெல்ல நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 9.0 மீட்டர் வரையும் நகலகம் வீதி தே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 6.60 அடி வரையும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.