செய்திகள்
போராடிப் பெற்ற சமாதானத்தை சீர்குலைக்க எந்த சக்தியையும் அரசு அனுமதிக்காது - பாதுகாப்பு செயலாளர்
எந்தவொரு சக்தியையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலானஅரசு அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒன்று கூடல்களை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுமாறு பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எந்தவொரு ஒன்று கூடல்கள் மற்றும் கூட்டங்கள் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு ஏஐஏ மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நன்கொடை
வரையறுக்கப்பட்ட ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் கேகாலை கிளையினால் ரூ. 500,000 , இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கும் நடவடிக்கை முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு பொருத்தமற்றது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மற்றும் மதங்களின் தேசிய பாரம்பரிய தளங்கள் பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
தொல்பொருள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தளங்கள் தனிநபர் மற்றும் திட்டமிட்ட குழுக்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.
கோவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் 'இட்டுகம’ ஊடக பிரச்சாரம் இன்று ஆரம்பம்
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதென ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி திரட்டும் முயற்சியான 'இட்டுகம' வுக்கு ஊடக பிரச்சாரத்தனை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே, 13) ஆரம்பமானது.
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீதுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கிறது.
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் முனசிங்க நியமனம்
இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கதிரியக்கவியல் நிபுணர் மேஜர் ஜெனரல் (டொக்டர்) சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போரில் அங்கவீனமுற்ற பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினால் மீள பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னணியில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு வினியோகிக்கவென போரில்...
மொபைல் அடிப்படையிலான பண பரிமாற்ற மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை
மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் இ-வாலட் பணப் பரிமாற்ற முறை மற்றும் தனிநபர்கள் அச்சுறுத்தல் மூலம் கப்பம் பெறல் போன்ற மோசடி நடவடிக்கைள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
மாலைதீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானம்
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலை தீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பரிசீலித்து வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் புதுமையான தீர்வுகள்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் செலவு குறைந்த புதுமையான கண்டுபிடிப்புகள் பல பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்றையதினம் (மே,06) காட்சிக்கு வைக்கப்பட்டது.
புனித வெசாக் நோன்மதி தினச் செய்தி
cynfq;fpYk; thOk; ngsj;j kf;fSld; ,ize;J ,yq;if tho; ngsj;ju;fSk; ngsj;j rkaj;jpd; mjp cd;dj rka tpohthd ntrhf; gz;bifia kpFe;j rkag; gw;Wld; nfhz;lhLfpd;wdu;.
ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு
ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன.
எதிர்வரும் போயா தினங்களில் படையினருக்கு நல்லாசி வேண்டி ஒளிவிளக்கு ஏற்றுமாறு செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் வேண்டுகோள்
தன்னலமற்ற சேவைள் பலவற்றை நாட்டுக்கு அளிக்கும் படையினருக்கு நல்லாசி வேண்டி விஷேட நிகழ்வுகள் பல எதிர்வரும் வெசாக் போயா தினங்களில் செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Tamil
Tamil
Tamil
Tamil
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை வகுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயத்திட்டங்க்களை வலுப்படுத்துவதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Tamil
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் முப்படை வீரர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - பாதுகாப்பு செயலாளர்
முப்படை வீரர்களுக்கும் விசேடமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராணுவத்திற்காக பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றுதல் ஆதாரமற்றது - பாதுகாப்பு செயலாளர்
முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பாடசாலைகள தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைக்குமாறு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Tamil
























