--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் 68 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார், நறுவிலிக்குளம் பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் (செப்டம்பர், 21) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 228 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினருக்கு சேதன பசளை உற்பத்தி குறித்த விழிப்புணர்வு திட்டம் முன்னெடுப்பு

வெலிஓயா பிரதேசத்தில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இராணுவத்தினரால், மகாவலி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையினரால் ஏனைய படைவீரர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி

இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்களினால் இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களுக்கு அடிப்படை நிலை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறித்த பயிற்சி நெறி பலபிட்டியவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காயமடைந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்

பல நாள் மீன்பிடிக்கு கடலுக்கு சென்றிருந்தத படகில் பலத்த காயமடைந்த இரண்டு மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் கடற்படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய நீர் மட்ட அளவினை சீர்செய்ய மணல் மூட்டை நீர்வழி அமைப்பு

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் மட்டம் குறைந்ததையடுத்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, மகாவலி ஆற்றிலிருந்து கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வசதி செய்வதற்காக இராணுவத்தினரால் கந்தளாய் நீர்வழியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சிகள் நிறைவு

இலங்கை விமானப்படை, பங்களாதேஷ், மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கான இல.02 வன சஞ்சார போரிடல் பயிற்சி மற்றும் ஹெலிகொப்டர் மூலமான போரிடல் பயிற்சி என்பவற்றை உள்ளடக்கிய பயிற்சிநெறியை மொரவெவ விமானப்படை நிலையத்தில் உள்ள சிறப்புப் பயிற்சிப் பாடசாலையில் நடத்தியது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துகிறது

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (செப்டம்பர், 16) வேரஹெராவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய விடுதி கட்டிடத்தின் நிர்மாணப்  பணியைத் தொடங்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப்பகுதியில் நேற்றயை தினம் (செப்டம்பர், 16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, ​​நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ கிராமிற்கும் அதிகம்) உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விமானப்படை குத்துச்சண்டை வீரர்கள்

58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை விமானப்படை பெண்கள் குத்துச்சண்டை அணியின் நான்கு பெண் வீராங்கனைகள் இன்று (செப் 16) ரஷ்யாவின் மாெஸ்கோ நகரிற்கு பயணமானார்கள்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலஹருவ பிரதேசத்தில் சூட்சமமான முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது தனமல்வில, பலஹருவ பிரதேசத்தில் சூட்சமமான முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படை சர்வதேச பயிற்சியை வழங்குகிறது

மேற்கு ஆப்பிரிக்க நாட்டு படைவீரர்களுக்கு, விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்துபறிமுதல் செய்யும் பயிற்சி நெறியின் ஆரம்ப கட்ட பயிற்சி, அண்மையில் கடலோர பாதுகாப்பு படையினரால்,மிரிஸ்ஸ, உயர் பயிற்சி மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

தலைமன்னார், உருமலைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர்,14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எருக்கலம்பிட்டியில் 72,000ற்கும் மேற்பட்ட கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 72,542 கடலட்டைகள் நேற்றைய தினம் (செப்டம்பர்,12) கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொஸ்கோவின் ‘இராணுவ விளையாட்டு -2021’ இல் ‘சிறந்த அணிக்கான கிராண்ட் பிரிக்ஸ்’ விருது இராணுவ கலைஞர்களுக்கு

முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மொஸ்கோவின் 'VII சர்வதேச இராணுவ விளையாட்டு -2021' போட்டிகளின் கலாசார பிரிவின் சிறப்பான அணிக்கான விருது மற்றும் சிறந்த குழுவிற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருது உட்பட பல விருதுகளை இலங்கை இராணுவ நடனக் கலைஞர்களின் குழுவினர் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய வெளிப்படைத் தன்மையான மற்றும் உண்மைத் தன்மை கொண்ட மேடைப் படங்கள் மற்றும் அவற்றின் கலாசார பிரதிபலிப்பு என்பவற்றில் சிறந்த அணிக்கான விருதையும், வாத்திய போட்டிகளில் (டூயட்) முதலிடத்தையும், கலாச்சார ஆடைக்காக இரண்டாமிடத்தையும் பெற்றுகொண்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நுவரெலியா வனப்பகுதியில் காணாமல்போன யுவதி படையினரால் மீட்பு

நுவரெலியா டின்சின் தோட்ட வனப்பகுதிக்குள் கடந்த 5ம் திகதி காணாமல் போன யுவதி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.