--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை- வளிமண்டலவியல் திணைக்களம்

அந்தமான் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காட்டு தீ அணைக்கப்பட்டது

உலர்நிலையுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை பம்பரகலகந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 112வது பிரிகேட்டின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் 109 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர்

200 குளங்களை புனரமைப்பு செய்யும், ஜனாதிபதியின் "வாரி செளபாக்ய" திட்டத்தின் கீழ் வெலிஓயா, மகாவலி-எல் வலயத்தில் அமைந்துள்ள 4 குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் 417 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மடகலிலிருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 417.2 கிலோகிராம் கேரளா கஞ்சா, கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

திருகோணமலையில் இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கிவைப்பு

திருகோணமலையில் உள்ள இராணுவத்தினரால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலில் பயணம் செய்வோர், மீனவ சமூகம அவதானமாக செயற்படவும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சியில் தேவையுடைய குடும்பங்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் வீடு கையளிப்பு

அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெற்றிலைக்கேணியில் 107 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வெற்றிலைக்கேணி, கடைக்காடு கரையோரப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 107.840 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிக்கரம்

தனமல்வில பகுதியில் நடைபெற்ற ‘கம சமக பிலிசந்தரக்’ நிகழ்வின் போது பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் கட்டளைகளுக்கிணங்க, இராணுவத்தினரால் சமீபத்தில் இரண்டு பாடசாலை விளையாட்டு மைதானங்களின் புனர் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப் படையினரால் உயிரிழந்த படை வீரர்கள் நினைவு கூறப்பட்டனர்

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பங்குபற்றுதலுடன் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நேற்று (ஜூலை 19) சர்வ மத நினைவேந்தல் நிகழ்வு விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணம், நவட்குழியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், நவட்குழியில் பெற்றார்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இராணுவத்தின் 52வது பிரிவு மற்றும் 523வது பிரிகேட் வீரர்களினால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் திறந்துவைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மகா சங்கத்தினரின் வதிவிட மடாலயம் இராணுவத்தால் புதுப்பிப்பு

ஜனாதிபதியின் 'கம சமக பிலிசந்தர' திட்ட பணிப்புரைக்கமைய கெபிதிகொல்லாவ, விஹாரஹல்மில்லேவ ராஜமஹா விஹாரவில் உள்ள பழைய 'சங்கவாசய' (குடியிருப்பு மடாலயம்) இரணுத்தினரால் புனரமைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சியில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு

கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வட்டக்கச்சி, பெரியகுளம் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. சிவசாமி முத்து குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யும் பல நாள் மீன்பிடி கப்பல் கண்காணிப்பு அமைப்பு

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யக்கூடிய வகையில் பல நாள் மீன்பிடி கப்பல்களினை கண்காணிப்பு பொறி முறைக்கு பங்களிப்பு செய்யும் கண்காணிப்பு அமைப்பினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியின் இலங்கை பெற்றுக்கொபல நாள் மீன்பிடி கப்பல்களினை கண்காணிப்பு பொறி முறைக்கு பங்களிப்பு செய்யும் கண்காணிப்பு அமைப்பினை ள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பரா ஒலிம்பிக் கமிட்டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

விளையாட்டு அமைச்சு, 'உயர் செயல்திறன்' விளையாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 'விளையாட்டுப் போட்டிகளில் புத்துணர்ச்சியுடனான விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும், விளையாட்டு வீரர்களிடையே விளையாட்டு திறமைகளை மேம்படுத்தவும்
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடனும், தேசிய விளையாட்டு கவுன்சிலின் தேசிய பரலம்பெம்பிக் கமிட்டியுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவம் பொது விற்பனைக்கு 1 மெட்ரிக் டன் உலர்ந்த மிளகாய்களை உற்பத்தி செய்தது

இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம், கந்தகாடு, மெனிக் பார்ம் மற்றும் ஆண்டியாபுளியங்குளம் இராணுவம் பண்ணைகளில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்ட காய்ந்த மிளகாய் வைபவ நீதியாக சிறு பயிர்செய்கை இராஜாங்க அமைச்சிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை வைத்தியசாலைக்கு புதிய ஹீமோடையாலிசிஸ் பிரிவு

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையின் புதிதாக நிறுவப்பட்ட ஹீமோடையாலிசிஸ் பிரிவு நேற்று (ஜூலை 15) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.