--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படடையின் ஆறாவது தொகுதியினர் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளுக்காக மத்திய ஆபிரிக்க குடியரசு நோக்கி பயணம்

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையில் கடமை புரிந்து நாடு திரும்ப உள்ள ஹெலிகாப்டர் படையணி வீரர்களுக்கு பதிலாகவே இவர்கள் அங்கு  கடமைக்காக செல்லவுள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

நாட்டில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2, 277 பேர் தனிமைப்படுத்தலில்

படைகளால் மேற்பார்வை செய்யப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தமாக  2277 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது தொடர்பாக இராணுவத்தினரால் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்,  கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாக அறிவுறுத்தும் சுவரொட்டி பிரச்சாரம் திட்டம் இலங்கை இராணுவத்தின் 652வது பிரிகேட்டினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 64,075 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையாக ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும்

எவ்வாறாயினும் கொழும்பு கம்பஹா களுத்துறை கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள 25 பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக குருநாகல் நகரம் மற்றும் பாணந்துறை வேகந்த மேற்கு கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மானிப்பாயில் கைவிடப்பட்ட நிலையில் முருகர் சிலை பொலிஸாரால் கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் 7 அங்குல உயரமுள்ள முருகக் கடவுளின் சிலை, மூன்று மயில்  சிலைகள் மற்றும் அடையாளம் காணப்படாத உலோகப் பாத்திரங்கள் என்பவற்றை  மணிப்பாய் பொலிஸார் நேற்று கைப்பற்றினர்.  யாழ்ப்பாணம்  மணிப்பாய் சங்கனாய் கோவில் அருகே பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  இந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை முன்னெடுக்கும் சிவில் பாதுகாப்பு படை

மொத்த விற்பனை பொருளாதார மையங்களை மீள திறந்து வைக்கும் செயல்முறைக்கு அமைவாக  பொதுமக்கள் நலன்கருதி நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகள் சிவில் பாதுகாப்பு படையினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீப்பற்றிய மீன்பிடி படகு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது

தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றில் ஏற்பட்ட தீ இலங்கை கடற்படையினர் அடைக்கப்பட்டு அப்படகு பாதுகாப்பாக  கரைக்கு கொண்டு வரப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

5711 கிலோ உலர் மஞ்சள் கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற் படையினரால் நாட்டின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5711 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று குணமடைந்த 537 பேர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 449 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் 445 பேர் உள் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கை பிரஜைகள் எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2186 கடலட்டைகளுடன் 40 சந்தேகநபர்கள்  வடமத்திய மற்றும் வடமேல் கடற்படை கட்டளையகங்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது  கைது செய்யப்பட்டனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச ஆதரவுடன் மஞ்சள் பயிர்ச்செய்கை திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள உலர்ந்த மஞ்சளுக்கான அதிகரித்த கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை திணைக்களத்தினால் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பயிர்ச்செய்கை காணியில் மஞ்சள் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐந்து கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்ததை அடுத்து நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

63 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வெற்றிலைக்கேணி கடற் பிரதேசத்தில் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 63 மில்லியன் ரூபா பெறுமதியான 213 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவு பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகள் படையினரால் முன்னெடுப்பு

முல்லைத்தீவில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பொதுவிடங்களில் ஆபத்தினை குறைக்கும் வகையில் 64 வது படைப்பிரிவின் படை வீரர்களினால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நோயாளிகளுக்கு தபால் மூலம் மருந்துகளைஅனுப்பி வைக்கும் திட்டம் இன்று ஆரம்பம் : சுகாதார அமைச்சு

நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் வழக்கமாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை இன்று முதல் அமலாகும் வரையில் தபால் மூலம் விநியோகிக்கும் பொறிமுறையை தபால் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை  பெற்றுக்கொள்ளும் மற்றும் வழங்கும் செயற்பாடுகளை ம
இலகுபடுத்துவதற்காக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித  அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

திருகோணமலைக் கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர்

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் நேற்று (நவம்பர்,02) முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கரையொதுங்கிய திமிங்கலங்கள் கடற்படை தலைமையிலான கூட்டு செயல்பாட்டில் மீண்டும் ஆழ்கடலுக்குள்

கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பிரிவு, பொலீஸ் உயிர்காப்பு பிரிவு, தன்னார்வ உயிர் காப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய  திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டு சேர்க்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களும் கலிகமுவ பிரதேச சபை பிரதேசமும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் பிரதேசமும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.