பாதுகாப்பு செய்திகள்
போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியின் மூலம் சமூக புலனாய்வு பிரிவு அமைக்க திட்டம்
மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூக புலனாய்வுப் பிரிவை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் மூலம் போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து நமது பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இலங்கை பாரா விளையாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 4வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் பல பதக்கங்களை வென்ற இலங்கை பாரா தடகள அணி திங்கள்கிழமை (அக். 30) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியது.
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் மாணவி நீச்சல் போட்டியில் சாதனை
அகில இலங்கை தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் நீச்சல் விளையாட்டு போட்டியை 2:45:69 நிமிடங்களில் பூர்த்தி செய்து கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவி புத்திமா சமாதி தம்சரணி சேனாரத்ன புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை விமானப்படை லாபுகஸ்தமன வனப்பகுதியில் விதை குண்டுகளை வீசியது
இலங்கை விமானப்படை (SLAF) தனது விதை குண்டுவீச்சு திட்டத்தின் 8 வது கட்டத்தின் கீழ் 50 ஏக்கர் வனப்பகுதியில் 80,000 விதை குண்டுகளை வீசியது. கடந்த இருநாட்களில் (அக். 30 & 31) அனுராதபுரத்தில் உள்ள லாபுகஸ்தமன வனப் பகுதியில் இந்த விதை குண்டுகள் விமானப்படையின் MI - 17 ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் வீசப்பட்டது.
அமெரிக்கத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) இடம்பெற்றது.
14வது ஆசிய குற்றவியல் மாநாடு 2023 இல்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
இரத்மலானையிலுள்ள ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடத்தில் நடைபெற்ற 14வது ஆசிய குற்றவியல் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (அக் 29) கலந்து சிறப்பித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு) எல்பீ பலகல்ல காலமானார்
இராணுவத்தின் 16வது தளபதியான ஜெனரல் (ஓய்வு) எல்பீ பலகல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் வியாழக்கிழமை காலை (ஒக்டோபர் 26) காலமானார்.
புதுக்குடியிருப்பு விவசாயிகளுக்கு இலங்கை இராணுவம் உதவி
இலங்கை இராணுவத்தின் 68வது காலாட்படை பிரிவினரால் அண்மையில் புதுக்குடியிருப்பு மற்றும் சுதந்திபுரம் பகுதிகளில் உள்ள விவசாயிகளினால் கைவிடப்பட்ட நெல் வயல்களை பயிர்செய்கைகாக உழுது தயார்செய்து கொடுத்துள்ளனர்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பெட்ரிக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம்
ஸ்தாபிக்கப்படும் – சாகல ரத்நாயக்க
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை இராணுவத் தளபதிக்கு பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் அணிவகுப்பு கெளரவ மரியாதை
பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் இப்திகார் ஹசன் சவுத்ரி அவர்களின் அழைப்பின் பேரில் தற்போது பாகிஸ்தான் காகுல் நகருக்கு வருகை தந்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சனிக்கிழமை (ஒக்டோபர் 21) பகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு மரியாதையில் கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்திய கடற்படையின் உயர் தொழில்நுட்ப இலகுரக ஹெலிகாப்டர் இலங்கை வருகை
இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று அண்மையில் (ஒக்.19) இலங்கையை வந்தடைந்தது.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 4000 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 212 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின்படி, இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா என்ற கப்பலின் கடற்படையினர் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (168 கிமீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்துள்ளனர். குறித்த கப்பலை இன்று (2023 அக்டோபர் 22) காலை தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து கப்பலில் மேற்கொள்ளப்பட்ட உன்னிப்பான சோதனையின் போது 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 212 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் (Crystal Methamphetamine) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.













