--> -->

பாதுகாப்பு செய்திகள்



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட இராணுவத்தின் பெண் வீராங்கனைகள் அடங்கலான பாதுகாப்புக்குழு நாட்டிலிருந்து பயணம்

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய குடியரசு தினத்தன்று மறைந்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு நினைவஞ்சலியுடன் மரியாதை

இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

10 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்களை அங்கவீனமுற்ற 167 படை வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு

ரணவிரு சேவா அதிகார சபை அங்கவீனமுற்ற 167 படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் செயற்கை கால்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காலி கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணிகளில் கடற்படையினர் ஈடுபாடு

காலி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாம் நிறைவு

வெலிசறையில் உள்ள கடற்படையின் லங்கா அணிவகுப்பு மைதானத்தில் வியாழக்கிழமையன்று (ஜனவரி, 20) இடம்பெற்ற கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமினை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மறைந்த முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) காலமான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (ஜனவரி, 19) நல்லடக்கம் செய்யப்பட்டது. தெஹிவளை - கல்கிசையில் உள்ள ‘நிசல செவன’ மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துப்பாக்கி பயிற்சி கல்லூரியில் துப்பாக்கிச்சுடும் போட்டிகள்

சிப்பாய்களுக்கு இன்றியமையாத அம்சங்களான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சிப்பாயின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவசியமான சந்தர்ப்பங்களில் போரிடுவதற்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கும் வீரர்களை உருவாக்க முடியும்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவில் 100 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலைக் காலணிகள் அன்பளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகளை இராணுவம் அண்மையில் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ ஸ்குவாஷ் வீர, வீராங்கனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி

சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் போட்டி மற்றும் PSA (தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம்) போட்டி நிகழ்வுகள் ஜனவரி 6-9 திகதிகளில் எஸ்எஸ். ஸ்குவாஷ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப் நிகழ்வின் போது பின்வரும் வெற்றிகளைப் பெற்றனர்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கில் பசுமை விவசாயத் திட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பசுமை விவசாயம்’ அடிப்படையாகக்கொண்ட சேதனப் பசளை உற்பத்தித் தளத்திற்குச் சென்று உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இந்த விஜயத்தின் போது செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர் கைகோர்ப்பு

மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுப்பு

இலங்கை கடற்படையினரால் உஸ்வெட்டகையாவ பிரதேசத்தில் அண்மையில் (ஜனவரி, 09) கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி இந்த சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குட்டிகலை பிரதேசத்தில் இராணுவத்தினரால் மர முந்திரிகை செய்கை

ஏற்றுமதிக்கான பயிர்செய்கையை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவித்து, அந்நிய செலாவணியை ஈட்டும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவப் பொதுச் சேவைப் படையணியினால், குட்டிகலை பிரதேசத்தின் உள்ள படைமுகாம் வளாகத்திற்குள் சுமார் 700 முந்திரிகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டம் ஆரம்பித்து வைக்க க்கப்பட்டது.