--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி இந்தியா பயணம்

கடந்த புதன்கிழமையன்று (08) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (டிச.10) புது தில்லிபுறப்பட்டுச் சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும்  சமூக நலன்புரி  சேவைகளின் ஒரு பகுதியாக வவுனியாவில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று அன்மையில்  பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ் இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது.  யாழ்ப்பாணம் காரைநகரில் அமைந்துள்ள எலார  கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

82 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், மதகல் கடல் பகுதியில்  கடற்படை நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் 82 மில்லியன் ரூபாய் பெறுமதியான   கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'பானம' மற்றும் 'பொத்துவில்' பயனாளிகளுக்கு இரண்டு புதிய வீடுகளை இராணுவத்தினரால் கையளிப்பு

இலங்கை இராணுவம் அண்மையில் பானம மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் வசிக்கும் பயனாளிகளுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை வைபவ ரீதியாக கையளித்தது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன உரம் லக்பொஹொர உரக் கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பு

சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன உரத்தின் ஒரு தொகுதி அண்மையில் அரசுக்குச் சொந்தமான லக்பொஹொர உரக் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘குவன் மிதுதம்’ திட்டத்தின் கீழ் விமானப்படையினரால் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

கொத்மலை, புடலு ஓயாவிலுள்ள சுமங்கல ஆரம்பப் பாடசாலை மற்றும் வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஷ்ண வித்தியாலயத்தில் விமானப்படையினரால் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அண்மையில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் இரு முன்னாள் போராளி குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அல்லது அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, யாழ் குடாநாட்டில் அல்வாய் மற்றும் தும்பளை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சோதனைகளுக்காக பயன்படுத்தும் எக்ஸ்ரே இயந்திரங்கள் கடற்படைக்கு ​​கையளிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்ப்ரெட் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகத்தின்  பிரதிநிதிகள் இணைந்து  சோதனைகளுக்காக பயன்படுத்தும் நான்கு எக்ஸ்ரே இயந்திரங்களை  கடற்படையிடம்  நேற்று (நவம்பர் 30) ​​கையளித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக இராணுவ மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இலங்கை 'பெயார் பிளே' விருதை சுவீகரித்தது

இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களைக் கொண்ட இலங்கை அணி, ஈரானின் தெஹ்ரான் நகரில் அண்மையில் நடைபெற்ற 35வது உலக இராணுவ மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் "பெயார் பிளே விருது" வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படை தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியில் வெளிநாட்டு படையீனரும் பங்கேற்பு

இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பயிற்சியாளர்களில் பல வெளிநாட்டு படைவீரர்களும் பங்கேற்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு

காரைநகர் மற்றும் புத்தூர் பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட  மேலும் இரண்டு புதிய வீடுகள் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு  அன்மையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையின் சர்வதேச கூட்டுப் பயிற்சி நிகழ்வு நிறைவு

எதிரிக் கப்பல்கள், கடற்கொள்ளை, மற்றும் கடத்தல், மற்றும் சுங்க நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படைவீரர்களுக்கான பாடநெறிகளை உள்ளடக்கிய பயிற்சிகள் மற்றும் அதன் மேம்பட்ட பயிற்சி நெறிகள் என்பன அண்மையில் நிறைவடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படையினரால் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம் முன்னெடுப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் மற்றும் பங்களாதேஷ் நாட்டு பிரதிநிதிகள் மிரிஸ்ஸாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அண்மையில் விஜயம் செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

57 வது இராணுவ படையணிகளுக்கிடையிலான தடகள போட்டி 2020-2021 நிறைவு

இராணுவ விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இராணுவ விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஊக்கமளிக்கும் நிகழ்வான 57 வது இராணுவப் படையணிகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2020-2021 26 ம் திகதி மாலை கொழும்பு சுகததாச மைதானத்தில் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச வெற்றி எதிர்பார்ப்புகளுடன் நிறைவுபெற்றது.