--> -->
ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது.
மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை கைப்பற்றினர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட இரத்த இருப்பின் குறைவினையடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 ஆவது படைப் பிரிவு படையினரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
Tamil
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.
இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபை அங்கவீனமுற்ற 167 படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் செயற்கை கால்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
காலி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
வெலிசறையில் உள்ள கடற்படையின் லங்கா அணிவகுப்பு மைதானத்தில் வியாழக்கிழமையன்று (ஜனவரி, 20) இடம்பெற்ற கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமினை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) காலமான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (ஜனவரி, 19) நல்லடக்கம் செய்யப்பட்டது. தெஹிவளை - கல்கிசையில் உள்ள ‘நிசல செவன’ மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிப்பாய்களுக்கு இன்றியமையாத அம்சங்களான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சிப்பாயின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவசியமான சந்தர்ப்பங்களில் போரிடுவதற்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கும் வீரர்களை உருவாக்க முடியும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகளை இராணுவம் அண்மையில் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் போட்டி மற்றும் PSA (தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம்) போட்டி நிகழ்வுகள் ஜனவரி 6-9 திகதிகளில் எஸ்எஸ். ஸ்குவாஷ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப் நிகழ்வின் போது பின்வரும் வெற்றிகளைப் பெற்றனர்.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பசுமை விவசாயம்’ அடிப்படையாகக்கொண்ட சேதனப் பசளை உற்பத்தித் தளத்திற்குச் சென்று உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இந்த விஜயத்தின் போது செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது