--> -->

நிகழ்வுகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கில் தேவையுடையோருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடத்தி வரப்பட்ட ரூபா. 9 மில்லியன் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது

மன்னார், பேசாலை குருசபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வாலம்புரி சங்கு ஒன்றும்  கைப்பற்றப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் இரத்த தானம்

கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி பிரதேச நோயாளர்களின் அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் இரத்த தானம் செய்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கொழும்பு காக்கைதீவு கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது

இலங்கை கடற்படையினர் அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கடற்கரையை சுத்தம் செய்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் காயமடைந்த இராணுவ வீரர்களை
பாதுகாப்பு செயலாளர் நேரில் சென்று நலம் விசாரிப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 15) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் புதன்கிழமையன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் கடமையாற்றும் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான படை வீரர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தியத்தலாவை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப்படை பயிலுனர்கள்

தியத்தலாவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் மரியாதை அணிவகுப்பு அண்மையில் விமானப்படை பிரதிப் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம்டி ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடற்படையினர் வடக்கு மாகாணத்தில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பு

இலங்கை கடற்படை (SLN) அண்மையில் (ஜூலை 04) காரைநகர் கால்வாயில் ‘டிராகன் படகு சம்பியன்ஷிப்’போட்டி நிகழ்ச்சி  ஒன்றை நடத்தியது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

யாழ் மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வாய்ப்பு

இலங்கை இராணுவம் (SLA) யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குறைந்த வருமானமுடைய பாடசாலை மாணவர்களுக்கு 22 துவிச்சக்கர வண்டிகளையும், 50 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைக்கும் நிகழ்வொன்றை அண்மையில் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் நடத்தியது. கனடாவில் வதியும்  திரு.ரஜிகரன் சண்முகரத்தினம் அவர்கள் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படை யுத்த வீரர்கள் நினைவு கூறல் நிகழ்ச்சி

இலங்கை விமானப்படை  தனது யுத்த வீரர்களை நினைவு கூறி “போர்வீரர்கள் நினைவேந்தல் விழா 2022” நிகழ்வை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அனுசரணையின் கீழ் ஏக்கலையிலுள்ள அதன் பயிற்சி பாசறையில் விமானப்படை போர் வீரர்  நினைவகத்தில்  அண்மையில் நடாத்தியது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இராணுவப் படையினர் இரத்த தானம்

நோயாளிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமாக கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இலங்கை  இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தெதுரு ஓயாவில் குப்பைகளை அகற்ற இலங்கை கடற்படை உதவி

புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கடற்படையினர்  புத்தளம், அனவிலுந்தாவை பிரதேசத்தில் தெதுரு ஓயா ஆற்றில் அடைபட்டிருந்த  குப்பைகளை அகற்றினர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடலோர காவல்படைக்கு ஆஸ்திரேலிய எல்லைப் படை தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கை கடலோர காவல்படைக்கு ஒரு தொகை  தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கிடைக்கப்  பெற்றுள்ளன . இது கடலோரக் காவல்படையின் எதிர்கால பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடலோர காவற்படை யினால் காங்கேசன்துறை துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு முகங்கொடுத்தல் பயிற்சி

இலங்கை கடலோர காவல்படையின் பிராந்திய நடமாடும் பயிற்சிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ‘எண்ணெய் கசிவு முகங்கொடுத்தல் பயிற்சி பட்டறை’.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏட்பாடு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் உள்ளடக்கிய தொடர் இரத்ததானப் முகாம்களை இலங்கை கடற்படை ஜூன் 16 அன்று ஏற்பாடு செய்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படையின் நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பம்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் உள்ளடக்கி நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் (ஜூன் 16) ஆரம்பிக்கப்பட் டது.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

16 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பில் சிக்கிய பயணிகள் பேருந்து

சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (ஜூன் 15, 2006) அரச பேரூந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 64 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரசுப் பேருந்தை குறிவைத்து இரண்டு கிளைமோர் கண்ணிவெடிகள் வெடித்ததினால் கொல்லப்பட்டவர்களில் 15 குழந்தைகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நாள்(ஜூன் 15) ...


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட், ஜூன் 09, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில்
இலங்கை இராணுவம் பல பதக்கங்களை வென்றது

46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நெதர்லாந்தில் நடந்த இராணுவ குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீரருக்கு வெள்ளிப்பதக்கம்

நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கை முப்படையினர் பங்கேட்பு

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், கடந்த ஞாயிறன்று (ஜூன் 05, 2022) நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கையின் முப்படைகளின் குழுவொன்று பங்கேற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சத்தேசய் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனர்த்த தயார்நிலையை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்

கொழும்பு, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு இன்று (03) விஜயம் மேட்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அதன் பேரிடர் தயார்நிலை மற்றும் முன்கூட்டிய திட்டமிடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.