--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 335 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

பேரமடு நிலையம், ஈடன் கார்டன் ஹோட்டல் மற்றும் மௌண்ட் லவினிய ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 335 பேர் இன்றைய தினம் (ஜூன்,20) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சென்னை மற்றும் மும்பை நகரிலிருந்து 194 இலங்கையர்கள் தாயகம் வருகை

இந்தியாவின் சென்னை மற்றும் மும்பை நகரில் இருந்து 150 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் ஜனித் விதானபதிரன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட, கொலை மிரட்டல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்ககளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் வெளிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு கடல் பிராந்தியங்களில் 58 கிலோ கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றினர்

யாழ் காரைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மெல்போர்னிலிருந்து 98 இலங்கையர்கள் தாயகம் வருகை

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 605 விமானத்தின் மூலம் மெல்பேர்ன் நகரில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,421ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 1,421 பேர் சிகிச்கையின் பின் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெண் இராணுவ சிப்பாய் தர்ஷிகா ஜேசுதாசனுக்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

பலாலி முகாமில் பணியாற்றும் தர்ஷிகா ஜேசுதாசன் எனும் இராணுவ பெண் சிப்பாய்க்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் புதிய வீடொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டின் சாவி, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் நேற்றைய தினம் (ஜூன், 18)
வீட்டின் முன்றலில் இடம்பெற்ற எளிய வைபவத்தின் போது பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொலிஸார்

தெஹிவளை, கல்கிசை, அங்குலான மற்றும் ரத்மலான பிரதேசங்களில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருளுக்கு அடிமையான ஐவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இப்பிராந்தியத்தில் பொலிஸார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1,386 மில்லியனை எட்டியது

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,386 மில்லியனை எட்டியுள்ளது. இந்த நிதியத்திற்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களினால் அளிக்கப்படும் நிதி நன்கொடைகள் மூலம் குறித்த மைல் கல் எட்டப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டுபாயிலிருந்து 289 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை

டுபாய் நாட்டிலிருந்து 289 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 விமானத்தின் டுபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தனுஜ சமரதுங்க தெரிவித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு கொவிட் மத்திய நிலைய தலைமையினால் விளக்கமளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில்,  முப்படை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஜூன் 15) இடம்பெற்றுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒமந்தாயில் ஆறு கிலோ கேரளகஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம் பகுதியில் ஓமந்தை பொலிஸாருடன் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 6 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆறு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது

கட்டுநாயக்க குரன பகுதியில் ஆறு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை போலீஸ் போதை ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

34 இலங்கை மாணவர்கள் நேபாளத்திலிருந்து நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேபாளத்திலில் சிக்கித்தவித்த இலங்கை மாணவர்கள் 34 பேர் இன்று அதிகாலை (ஜூன் 16) ஹிமாலய எயாலைன்ஸ் விஷேட விமானம் மூலம் நாட்டை  வந்தடைந்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னார் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் 180 இராணுவ வீரர்கள் இரத்ததானம்

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தினர் அண்மையில் (ஜூன், 14) இரத்ததானம் வழங்கியுள்ளனர்.   

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 740 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்ட  இலங்கை கடற்படை வீரர்கள் க சுமார் 740 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து  தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 14,097 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  சுமார் 13,875 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உமா ஓயா திட்ட பணிகளுக்கு வருகைதந்த ஈரானியர்கள் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு – கொவிட் மையம் தெரிவிப்பு

உமா ஓயா பல நோக்கு அபிவிருத்தி திட்ட  வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக வருகைதந்த ஈரானியர்கள் அனைவரும் தமது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் பங்கேற்பு

அண்மையில் (ஜூன் 13) கண்டி மாவட்ட 11 ஆவது பிவிவின் கீழுள்ள 111 படைப்பிரிவை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் தம்வள, முருதலாவை, மஹகந்தை மற்றும் கெங்கல்ல ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளம் கண்டு அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்ட்டாக தரமுயர்த்தப்பட்டார்

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையின் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும பொலிஸ் சார்ஜன்ட் டாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.