--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

154 இலங்கையர்கள் லண்டனிலிருந்து தாயகம் வருகை

லண்டனிலிருந்து 154 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் யூ எல் 504 இலக்க இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபத்திறன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

யாழ் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு கோப்பாய் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திடம் நேற்றையதினம் (ஜூன்,23) கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தர் விஷேட அதிரடிப்படையினரால் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றின்  முக்கியஸ்தர்  ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால்  செவ்வாய்க்கிழமையன்று (ஜூன், 23) கைது செய்யப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய மூவர் கைது

தெஹிவளை, முகத்துவாரம் மற்றும் முல்லேரியா பகுதிகளில் வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது  தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்ததன்பேரில்   மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்தூர துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி ரூபா 1, 392 மில்லியனையும் தாண்டுகிறது

'இடுகம' கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு நேற்றுடன் (ஜூன், 23) மீதி 1,392 மில்லியனாக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரணவிரு சேவா அதிகாரசபைக்கு சீன தூதரகத்தினால் 2.7 மில்லியன் ரூபா நிதியுதவி

படை வீரர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக சீன தூதரகத்தினால்  ரணவிரு சேவா அதிகாரசபைக்கு 2.7 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீரவின் வேண்டுகோளுக்கமைய இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிசர கடற்படை முகாம் 59 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காராணமாக மூடப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் வெலிசர முகாம் 59 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதன் நடவடிக்கைகளை இன்று (23) ஆரம்பித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, கிண்ணியா மற்றும் தம்பலகமம் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் நேற்றைய தினம் (ஜூன், 22) கைது செய்யப்பட்டனர்.  

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 4.5கிலோ கிராம் எடையுள்ள வெடிமருந்துகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 4.5கிலோ கிராம் எடையுள்ள டீ என் டீ ரக வெடிமருந்துகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு சந்தேகநபர்கள் பளை பொலிஸாரால்  நேற்று (ஜூன், 22)  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட சந்தேக நபர்கள் இன்று நீதமன்றத்தில் ஆஜர்

யக்கலமுல்ல, வாத்தஹென பகுதியை சேர்ந்த  33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு குறுந்தூர துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதவான் நீதி மன்றத்தில் இன்று  (ஜூன் 23) ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

217 இலங்கையர்கள் அமெரிக்காவிலிருந்து தாயகம் வருகை

அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் இன்றைய தினம் தான் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் ஆன்லைன் விமான சேவைக்குச் சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன்ரம்புக்கனையில் இருவர் கைது

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் 1.527 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'இந்திர' என அறியப்படும் இந்துனில் குமாரவின் நெருங்கிய சகாக்கள் என நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களைபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் விநியோகத்தவர்களுக்கு உதவிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

மாத்தறை மற்றும் மகர சிறைச்சாலைகளில்  உள்ள போதைப்பொருள் விநியோகஸ்தர்களுடன் தொடர்புகளைப் பேணிய இரு சிறைச்சாலை அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 785 ஆக உயர்வு

கொரோனா வைரஸ்  தொற்றுகுள்ளான மேலும் 12  கடற்படை வீரர்கள் குணமடைந்ததை அடுத்து  கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை   785 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

படைவீரரின் ஆயுதத்தை பறிக்க முயன்ற நபர் பலி

யாழ்ப்பாணம், கிளாலி பகுதியில் கடமையிலிருந்த படைவீரரின் ஆயுதத்தை கைப்பற்றி தப்பிச்செல்ல முயற்சித்த நபர் நேற்று மாலை 1.30 மணியளவில் பலியாகியுள்ளார்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,498 பேர் குனமடைதுள்ள அதேவேளை, 441 தொடர்ந்தும் சிகிச்சையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,950ஆக உள்ள நிலையில், இன்று (ஜூன், 22) காலை 6 மணியுடனான கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எவ்வித கொரோனா நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதக வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை - கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம்

கடந்த 24 மணித்தியாலங்களில்  புதிதக வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை  என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரண்டு வாரங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 6,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது

பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வு  பிரிவு ஆகியோரினால் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்தேடல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட  தேடுதல்  நடவடிக்கைகளின்போது சுமார் 6,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நீர்கொழும்பு சிறையிலிருந்தவாறு போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் முன்னெடுப்பு ; மூவர் கைது

நீர்கொழும்பு சிறையிலிருந்தவாறு  முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட சந்தேக நபர்களில் கட்டுநாயக்கவைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிசர கடற்படை தளத்தின் செயல்பாடுகள் வழமைக்கு

வெலிசர கடற்படைத் தளம் நாளை (ஜூன் 22) முதல் நாளாந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக  கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர்  இசுரு சூரியபண்டார  தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எட்டு அடி உயரமான புத்தர் சிலை முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ - 17 ஹெலிகொப்டர் மூலம் 3.5 டொன் எடைகொண்ட எட்டு அடிகள் உயரமான புத்தர் சிலையானது, வீரகெட்டிய மந்தாதுவ விளையாட்டு மைதானத்திலிருந்து முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு நேற்றைய தினம் எடுத்துச்செல்லப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 71 இராணுவ அதிகாரிகளுக்கு இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.