--> -->
Tamil
கம்பஹா சாம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 13) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி நேற்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ராஜமஹா விஹாரையை வந்தடைந்தது.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5372 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், சிலாபம் பகுதியில் வைத்து கைமாற்றப்படும் வேளையில் கடலோர பாதுகாப்பு படையின் சுரக்ஷா கப்பலின் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பவற்றை ஏந்திய வாகன பவனி பெளத்த சமய சம்பிரதாயங்களுடன் சுபவேளையில் நாடு தழுவிய தனது பயணத்தை இன்று (ஓகஸ்ட் ,08) ஆரம்பித்தது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் முப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் விமானப்படையின் புதுப்பிக்கப்பட்ட ஆளில்லா பறக்கும் விமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நேற்றையதினம் (ஆகஸ்ட் 05) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 16 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 820 கிலோ கிராம் கடலட்டையுடன் சந்தேகநபர்கள் ஏழு பேர் கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஐந்தாவது தேசிய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஓகஸ்ட், 04) இடம்பெற்றது.
அந்தமான் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலர்நிலையுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை பம்பரகலகந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 112வது பிரிகேட்டின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
200 குளங்களை புனரமைப்பு செய்யும், ஜனாதிபதியின் "வாரி செளபாக்ய" திட்டத்தின் கீழ் வெலிஓயா, மகாவலி-எல் வலயத்தில் அமைந்துள்ள 4 குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மடகலிலிருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 417.2 கிலோகிராம் கேரளா கஞ்சா, கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள இராணுவத்தினரால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
வெற்றிலைக்கேணி, கடைக்காடு கரையோரப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 107.840 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பகுதியில் நடைபெற்ற ‘கம சமக பிலிசந்தரக்’ நிகழ்வின் போது பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் கட்டளைகளுக்கிணங்க, இராணுவத்தினரால் சமீபத்தில் இரண்டு பாடசாலை விளையாட்டு மைதானங்களின் புனர் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.