--> -->
Tamil
பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார். கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சி விமானம் (செஸ்னா 150) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை , நிலாவெளி, இறக்கக்கண்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினராலும் அன்மையில் மாற்றி அமைக்கப்பட்டது.
நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய முழங்காவில் பொலிஸ், பொது சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபை இராணுவத்தினருடன் இணைந்து முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் நேற்றைய தினம் 362.95 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571.4 கிலோ கிராம் வெங்காய விதை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
யாழ்குடாநாட்டில் 36 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் - 19 தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையக இராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
முன்னைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தவாறு ஸ்ரீபாத யாத்திரை காலம் நிறைவுற்றதை குறிக்கும் வகையில் வழிபாட்டிற்காக கொண்டுவரப்பட்ட சுமன சமன் விக்ரகம் உட்பட ஏனைய விக்ரகங்கள் ஸ்ரீபாத புண்ணிய தளத்திலிருந்து நல்லதண்ணி விகாரைக்கு 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வீரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மன்னார் கரையோரப் பிரதேசத்தில் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகு ஒன்றும் நேற்றைய தினம் (ஜூன், 01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு ஒன்றினை கொவிட் - 19 தொற்றுக்குள்ளான 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றிடு செய்து , அதை அண்மையில் வைத்தியசாலை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த செயற்பாடு இலங்கை இராணுவத்தின் 3வது ஜெமுனு வாட்ச் மற்றும் பொறியியலாளர் சேவை படையணி வீரர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீன்பிடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் கடமைகளை ஒருங்கிணைக்கும் இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை வீரர்கள் திக்கேவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடமைகளை மேற்கொண்டிருந்தவேளை, தடை செய்யப்பட்ட சுறா மீன்களின் செட்டைகளை வைத்திருந்ததன் பேரில் இரண்டு மீன்பிடி வள்ளங்களுடன் 13 மீனவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பருத்தித்துறை கோட்டை பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர விசேட ரோந்து நடவடிக்கையின் போது 48.9 கிலோகிரம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு இரத்த மாதிரிகளில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையின் கிழக்கு கட்டளையக கடற்படை வீரர்களினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையகம் மே 29 அன்று மன்னருக்கு வடக்கே உள்ள கடல்களில் இலங்கை கடலுக்குள் நுழைய முயற்சித்த 04 மீன்பிடிக் கப்பல்களில் இருந்த 40 மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
யாழ், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான மீன்பிடித் துறையில் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு உள்ளிட்ட ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் யாழில் உள்ள இராணுவ வீரர்களினால் நேற்று (மே, 28) கைது செய்யப்பட்டார்.