செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்த வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்: ரணவிரு நலன் அமைச்சரவைப் பத்திரம் குறித்த கலந்துரையாடல்

ரணவிரு நலன் அமைச்சரவைப் பத்திரம் குறித்த உயர்மட்டக் கூட்டம் நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் நடைபெற்ற பிரித்தானிய நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்

கொழும்பு ஜாவத்தை மயானத்தில் உள்ள பொதுநலவாய போர்வீரர் கல்லறையில் இன்று (நவம்பர் 11) பிரித்தானிய நினைவு தினம் நினைவுகூரப்பட்டது. இரண்டு உலகப் போர்களின் போது உயிழந்த பொதுநலவாய நாடுகளின் வீரர்களின் துணிச்சலையும் உயர்ந்த தியாகத்தையும் இந்த நிகழ்வு நினைவு கூர்ந்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மனித விற்பனைக்கு எதிரான தேசிய மூலோபாய செயல் திட்டம்
குறித்த பாராட்டு விழா மற்றும் பாடநெறி

மனித விற்பனையை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பங்காளர்களை கௌரவிக்கும் விழா, மற்றும் தேசிய மூலோபாய செயல் திட்டம் (NSAP) 2026–2030 க்கான பாடநெறி ஆகியவை நேற்று (நவம்பர் 7) கொழும்பு மெரியட் கோர்ட்யார்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு செயலாளர் விரிவுரை நிகழ்த்தினார்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 6) கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) மாணவர் அதிகாரிகளுக்கு விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கும் புனித வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் பொன்விழா கொண்டாடப்பட்டது

இலங்கை மற்றும் புனித வத்திக்கானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவு விழா நேற்று (நவம்பர் 4) கொழும்பு Galle Face ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்

ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்புரி தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பொது தின திட்டத்தின் கீழ், நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பிலும், வார இறுதியில் கேகாலையிலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து சமுத்திரத்தில் சுனாமி மாதிரிப் பயிற்சி (IOWave 25) நாளை நடைபெறும்

"உலக சுனாமி விழிப்புணர்வு தினத்துடன்" இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்து சமுத்திர சுனாமி மாதிரிப் பயிற்சி (IOWave 25) நாளை (நவம்பர் 5) நடத்தப்படும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) வெளிச்செல்லும் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) வெளிச்செல்லும் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் ஜனக குணசீல நேற்று (நவம்பர் 3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் காடுகளைப் பாதுகாக்க “வன சுரக்கும” கூட்டு செயல்பாட்டுப் பிரிவு அரம்பிக்கப்பட்டது

இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாப்பதையும் வனக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட "வன சுரகும கூட்டு செயல்பாட்டுப் பிரிவு" இன்று (நவம்பர் 3) சுற்றுச்சூழல் அமைச்சு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விசேட தேவைகளையுடைய குழந்தைகளில் கல்வி மற்றும் பராமரிப்பு விடயங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் SERRIC-க்கு விஜயம்

‘Senehasa’ கல்வி, வளம், ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் (SERRIC), என்பது பாதுகாப்பு அமைச்சு (MoD) மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபை (RSA) ஆகியவற்றால் நிறுவப்பட்ட விசேட தேவைகளுடைய குழந்தைகளை பராமரிக்கும் ஒரு நிறுவனமாகும். விசேட தேவைகளுடைய குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும், இது அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தொடர உதவுகிறது. SERRIC நிலையத்தில் முப்படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு வழங்கப்படுகிறது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

“போர்வீரர்களின் பெருமை” திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் யுத்த வீரர் தொழில்முனைவோர்களுக்கான ஒரு நிகழ்ச்சி

'தேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வணிக தொடக்கத் திட்டங்களுக்கான பாதுகாப்பு பங்களிப்பு' குறித்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது 'Mission Reboot' என்ற திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களை தேசிய பொருளாதார மேம்பாட்டில் தொழில்முனைவோர்களாக ஆக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் ஒரு அம்சமாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 02 காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது

இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கியின் 102வது குடியரசு தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும்
பாதுகாப்புச் செயலாளரும் கலந்துக் கொண்டனர்

துருக்கி குடியரசின் 102வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கையில் உள்ள துருக்கி குடியரசின் தூதரகம், அக்டோபர் 29 அன்று கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொது தின நிகழ்வில் போர் வீரர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்

போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 29) பொது தின நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பானிய JMSDF AKEBONO

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள ஜப்பானிய கடற்படைக் கப்பலான 'JMSDF AKEBONO' பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (அக்டோபர் 28) பார்வையிட்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 28) உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ
விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்பு

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட RWP RSP VSV USP ndu psc PhD MSc (DM) MSc (NSWS) PGDM, நேற்று (அக்டோபர் 27) பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இன்று (2025 அக்டோபர் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர்
ஜெனரல் ருவன் வணிகசூரிய ஓய்வு பெறுகிறார்

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய (CNI) மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய இன்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலிலிருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

அனர்த்தத்துக்குள்ளான INTEGRITY STAR (MV) எனும் வணிகக் கப்பலில் இருந்த   பணியாளர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்பொன்றிற்கமைய விரைவாக செயல்பட்ட இலங்கை கடற்படையினர், குறித்த கப்பலில் இருந்த பணியாளர்களை அக்டோபர் 25ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டெடுத்த நிலையில் இன்று (அக்டோபர் 26,) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வருடாந்த NCC பயிற்சி அணிவகுப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்

2025 ஆம் ஆண்டிற்கான Hermann Loos மற்றும் De Soysa Challenge விருதுகளுக்கான வருடாந்த அணிவகுப்பு முகாம் இன்று (அக்டோபர் 21) ரன்டம்பேயில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.