செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரணத்திற்காக இந்திய இராணுவ மருத்துவக்
குழு இலங்கைக்கு வந்தது

கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக முழுமையாக செயல்படும் ஒரு இந்திய இராணுவ கள மருத்துவமனை, நேற்று (02 டிசம்பர்) இலங்கைக்கு வந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மனிதாபிமான உதவி: அனர்த்த நிவாரணத்துக்காக C-17 விமானம் இலங்கையை வந்தடைந்தது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வான் படையின் C-17 விமானம், நேற்று (02 டிசம்பர்) அனர்த்த நிவாரண மனிதாபிமான உதவிப் பொருட்களின் ஒரு தொகுதியுடன் இலங்கையை வந்தடைந்தது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரணத்திற்காக இந்திய விமானப்படை BHISHM க்யூப்களை
இலங்கைக்கு அனுப்பியது

இந்திய விமானப்படையின் (IAF) C-130J விமானத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு BHISHM க்யூப்கள், 30 நவம்பர் 2025 அன்று இலங்கையை வந்தடைந்தன. விங் கமாண்டர் சஞ்சய் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இந்திய விமானப்படை மருத்துவக் குழுவும் இத்துடன்  வந்தது. இவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வரவேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவசரகால நடவடிக்கை நிலையத்தின் செயற்பாடுகளை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அவசர நடவடிக்கை மையத்தை (EOC) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர நேற்று (டிசம்பர் 01) பார்வையிட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரண நடவடிக்கைகள்குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார்

நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மெத்யூ ஹவுஸ் இன்று (செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 02, 2025) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படைகள் அனர்த்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றன

மோசமான வானிலை காரணமாக அதிகரித்து வரும் நீர் மட்டத்தால் உருவான வெள்ள நிலைமைகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதித்துள்ளன. இந்நிலையில், இலங்கை முப்படைகள் நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தரை, நீர் மற்றும் வான்வழி உதவிகளை விரிவுபடுத்தியுள்ளன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள உலர் உணவுப் பொருட்களை பிரீமா நிறுவனம் நன்கொடையாக வழங்கியது

நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பிரீமா உலர் உணவுப் பொருட்களை பிரீமா நிறுவனம் நேற்று மாலை (நவம்பர் 30) ​​நன்கொடையாக வழங்கியுள்ளது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதுளை மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான
இடங்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்

பதுளை மாவட்டத்தில் மோசமான  வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் தொடர்பில் தேடிப்பார்த்து  மதிப்பாய்வு செய்வதற்கும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) விஜயம் செய்தார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,300 க்கும் அதிகமான மக்களுக்கு இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவு உதவி

இலங்கை கடற்படை நாடு முழுவதும் அனர்த்த நிவாரணப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை ஜனாதிபதி
அவதானத்துடன் கவனித்தார்

கலாஓயாவில் வெள்ள நீரில் சிக்கிய பஸ் ஒன்றில் இருந்த மக்களை பாதுகாப்பாக மீட்ட இலங்கை கடற்படையின் விரைவான மற்றும் துணிச்சலான நடவடிக்கையை சிறப்பு நடவடிக்கை அறையில் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உன்னிப்பாகக் அவதானித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் மும்முரம்

மிக மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இலங்கை கடற்படை மொத்தமாக 141 அனர்த்த நிவாரணக் குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. 2025 நவம்பர் 29 ஆம் திகதி காலை 0730 மணி நிலவரப்படி, அந்தக் குழுக்களில் 79 குழுக்கள் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . நவம்பர் 22 ஆம் திகதி நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து  இதுவரை, பாதிப்புக்குள்ளான 900 க்கும் மேற்பட்ட நபர்களை பாதுகாப்பாக மீட்கவும், சுமார் 2000 பேரை கடற்படை படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொனராகலை மாவட்டத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியான அனர்த்த நிவாரண
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

பாதுகாப்புப் படைகள் (மத்திய) மற்றும் 12வது காலாட்படை படையினர் மொனராகலை மாவட்டம் முழுவதும் வெல்ல நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நிகவரட்டிய மற்றும் தொம்பையில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேர்
இலங்கை விமானப் படைவினரால் மீட்பு

இலங்கை விமானப் படையினர், இன்று காலை (29 நவம்பர்) இரண்டு அவசர மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்களை ஏற்றிச் வந்த இந்திய விமானப்படையின் C-130 விமானம் (2025.11.29) இன்று அதிகாலை 01.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மிகவும் மோசமான காலநிலைக்கு மத்தியில் இராணுவத்தினர்
மீட்பு நடவடிக்கைகளை மேட்கொண்டனர்

கைலகொட முதியோர் இல்லத்தில் இருந்து 38 முதியவர்களை இராணுவத்தினர் மீட்டு, தொடர்ச்சியான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய உதவிக்காக அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு அனுப்பிவைத்தனர். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலன்னறுவையில் சிக்கித் தவித்த 13 நபர்களை விமானப்படை விமான மீட்பு

சீரற்ற காலநிலை காரணமாக பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் சிக்கித்தவித்த  13 பேர்  இன்று (28.11.2025) காலை இலங்கை விமானப்படை ஹிங்குரக்கொடை  தளத்தின் 7வது ஹெலிகொப்டர் படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-212 ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படைகள் உயர் தயார் நிலையில்: சீரற்ற காலநிலைக்கு மத்தியில் அவசர நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன

தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவசர நிலைமைகளுக்கு பதிலளிக்க முப்படை வீரர்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அனர்த்த முகாமைத்துவ குழு ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் கூடியது

நாட்டைப் பாதித்துள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அவசர நிலைமையை ஆராயும் பொருட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ குழு நேற்று மாலை (நவம்பர் 27) பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டம் நடைபெற்றது

சீரற்ற வானிலை காரணமாக நாடு கடுமையான அனர்த்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் பதுளை மாவட்டம் அதிகம் பதிப்பிக்கு உற்பட்டுள்ளது. நிலவும் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க, உடனடி மற்றும் உயர் மட்ட அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகளை உள்ளடக்கிய பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு, நேற்று (நவம்பர் 27) இரவு 0730 மணிக்கு பதுளை மாவட்ட செயலகத்தில் கூடியது. இதன் போது அனர்த்த தணிப்பு, நிவாரண ஏற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது

தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) பாடநெறி எண் 4 இன் பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 27) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) பட்டக்கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டனர்

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

காலநிலை நடவடிக்கை மற்றும் அனர்த்த தடுப்பு குறித்த 9வது ABU
ஊடக உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது

9வது ABU காலநிலை நடவடிக்கை மற்றும் அனர்த்த தடுப்பு ஊடக உச்சி மாநாடு (CADP 2025) இன்று (நவம்பர் 25) Mount Lavinia ஹோட்டலில் ஆரம்பமாகியது. ஊடகங்கள் மூலம் காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்த மூன்று நாள் நிகழ்வில் பிராந்திய ஊடகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அனர்த்த-ஆபத்து நிபுணர்கள் கலந்துக் கொள்கின்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

54வது பங்களாதேஷ் ஆயுதப்படை தின விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

நேற்று மாலை (நவம்பர் 24) கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற பங்களாதேஷின் 54வது ஆயுதப்படை தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்