செய்திகள்
விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த
முன்னேற்ற ஆய்வு கூட்டம்
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூலை 8) பாதுகாப்பு அமைச்சில் ஒரு முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாரஹேன்பிட்டவில் இலங்கை விமானப்படை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இம்மருத்துவமனை விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் பாதுகாப்பாக ட்கப்பட்டனர்
கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த இந்திய மீன்பிடி படகிலிருந்து நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் 2025 ஜூலை 06 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டனர்.
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு லெபனான்
ஐ.நா. அமைதி காக்கும் கடமைகளை பொறுப்பேற்பு
16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை 2025 ஜூலை 04 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
புத்தளத்தில் நிறுவப்படும் டொப்ளர் வானிலை ரேடார் தளத்தை
பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்
இலங்கையின் வானிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டுவரும் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று (ஜூலை 05) பார்வையிட்டார். ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் நாடளாவரீதியில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதையும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காயமடைந்த யானை 'பாத்தியா'வுக்கு சிகிச்சையளிக்க இராணுவத்தினால் உதவி
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவெரட்டிய மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த பாத்தியா என்ற காட்டு யானை, சமீபத்தில் நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பேரா வாவி கடல் விமான நடவடிக்கைகள் புதிய அத்தியாயத்திற்கு தயாராக உள்ளன
இலங்கையின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு புதுப்பிக்கப்பட்ட உயிர்ச்சக்தியைக் கொண்டுவரும் ஒரு முயற்சியான பேரா வாவி நீர் விமான நிலையமாக மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 03) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
அமெரிக்க தூதகரத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் Matthew House, இன்று (ஜூலை 03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (KDU IRC) 2025
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், '‘Bridging Frontiers: Interdisciplinary Research for Sustainable Progress’,' என்ற தலைப்பில் அதன் 18வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை (KDU IRC-2025) செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2025 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
மாலைதீவு பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
கொழும்பில் உள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூலை 02) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு தலைமையக வளாக நிர்மாணம திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மதிப்பாய்வு
பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாண திட்டம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 1, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் விஷேட நடவடிக்கை
கொக்கல பகுதிக்கு தெற்கே கடற்கரையில் ஐந்து மீனவர்களை ஏற்றிச் சென்ற ஒரு இழுவைப் படகு இன்று (ஜூன் 28) காலை கவிழ்ந்தது, மேலும் அளுத்கமாவில் கரை ஒதுங்கிய மற்றொரு வெற்று டிங்கி படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உடனடி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
புதிய இராணுவ பிரதம அதிகாரி பதவியேற்பு
இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் D K S K தோலகே USP nps psc, இலங்கை இராணுவத்தின் 67வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
ஊடக அறிக்கை
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு சர்வதேச சமூகத்திற்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது.
இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சந்திப்பு
அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (US Institute for Security Governance) (ISG) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் வெவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தது. இதன்போது இராணுவ திறன் வளர்த்தல் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழு, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
“நீங்கள் அளவிடாததை உங்களால் நிர்வகிக்க முடியாது”: இலங்கை 2025 ஆம் ஆண்டு உலக நீர்வரைவியல் தினத்தைக் கொண்டாடுகிறது
ஜூன் 24 அன்று வெலிசர வேவ்'ன் லேக் கடற்படை மண்டபத்தில் நடைபெற்ற 2025 உலக நீர்வரைவியல் தின ட(Hydrographic Day) கொண்டாட்டத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். "“Seabed Mapping: Enabling Ocean Action” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரமுகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் நீர்வரைவியல் துறை நிபிணக்குகள் பலரும் கலந்துக்கொண்டனர்.
IOM மற்றும் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்தன
மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி (NAHTTF), புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்புடன் (IOM) இணைந்து, மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியான பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜப்பான் அரசாங்கத்தின் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுன் நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர் மற்றும் பாதிப்புக்குற்படக்கூடிய சமூகங்களுக்காக செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்;தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகின்றது. மனித விற்பனையின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுவதுடன் மனித விற்பனையென்று சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிப்பதை ஊக்குவிக்கின்றது. கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல், சிறுவர் தொழிலாளர் மற்றும் இணையவழி குற்றம் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு; மனித விற்பனையின் வடிவங்கள் குறித்து சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மனித விற்பனையை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்படக்கூடிய மக்களை சுரண்டலிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Deputy Minister of Defence Graces IPSC Nationals 2025 Awarding Ceremony தேசிய IPSC 2025 துப்பாக்கி சுடும் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார் Deputy Minister of Defence, Major General Aruna Jayasekara (Retd), attended the awarding ceremony of the Sri Lanka International Practical Shooting Confederation (IPSC) Pistol Caliber Carbine (PCC) and Handgun Level III Nationals – 2025 as the Chief Guest. He was warmly welcomed by the President of the National Rifle Association of Sri Lanka (NRASL), Air Vice Marshal Ruwan Chandima. The prestigious event took place at the Wave’n Lake Navy Banquet Hall, Welisara, on Sunday (June 22). இலங்கை சர்வதேச IPSCயின் தேசிய துப்பாக்கிச் சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், விழாவிற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ருவன் சந்திம அன்புடன் வரவேற்றார். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) வெலிசர "வேவ்'ன் லேக்" கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது. The IPSC Nationals, held from June 18 to 22, drew the participation of 270 competitors representing 16 entities, including the tri forces, underscoring the event’s growing prominence in the national sporting calendar. ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற்ற IPSC தேசிய துப்பாக்கி சுடும் புத்தியில், முப்படைகள் உட்பட 16 கழகங்களை சேர்ந்த 270 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இது இப் போட்டியின் வளந்துவரும் முக
இலங்கை சர்வதேச IPSCயின் தேசிய துப்பாக்கிச் சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், விழாவிற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ருவன் சந்திம அன்புடன் வரவேற்றார். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) வெலிசர "வேவ்'ன் லேக்" கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது.
ஒரு பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா தின நிகழ்ச்சி
11வது சர்வதேச யோகா தினம் (IDY) இன்று (ஜூன் 21) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது, இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.
ட்ரோன் செயல்பாடுகள் ஒழுங்குமுறை செயல்திறனை மேம்படுத்துதல் குறித்து பங்குதாரர்கள் பங்களிப்புடன் பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்
டிரோன் (Drone) செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட பங்குதாரர் கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் துரிதமாக வளர்ந்து வரும் ட்ரோன் துறையில் ஒழுங்குமுறை ஒத்திசைவு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.
இராணுவ பிரதம அதிகாரி பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு
செயலாளரை சந்தித்தார்
ஓய்வுபெறும் இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 20) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
வெளிச்செல்லும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கையில் சேவையை நிறைவுசெய்து வெளியேறும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) Lieutenant Colonel Anthony C. Nelson, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 20) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்
கிழக்கு கரையோரப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத்
தடுக்க அரசு நடவடிக்கை
திருகோணமலை முதல் பொத்துவில் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்னைகளை தீர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.