செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்றார்

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழா நேற்று (மே 14) மாலை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள்
பாடநெறியை நடத்துகிறது

ஜெனீவா பாதுகாப்பு கொள்கை மையம் (GCSP), இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் (MOD) இணைந்து, மே 14 அன்று கொழும்பில் உள்ள ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியைத் ஆரம்பித்தது. 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்த பாடநெறி, 2025 மே 14 முதல் 21 வரை நடைபெறும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெசாக் தின செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நன்றியின் வெளிப்பாடு

பிரியாவிடை அணிவகுப்பு  ஒத்திகையின் போது  2025 மே 9 திகதி அன்று மாதுறுஓயா சிறப்புப் படை முகாமில் இடம்பெற்ற பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளுக்கு உதவிய பிரதேச மக்கள், அரளகன்விளை  பிரதேச வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள், பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் 40.70 ஏக்கர் நிலம் இலங்கை இராணுவத்தினால்
பொதுமக்களிடம் கையளிப்பு

மூன்று தனித்தனி காணிகளாக மொத்தம் 40.70 ஏக்கர் நிலம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் காணி விடுவிப்பு திட்டத்தின் கீழ் 2025 மே 01 அன்று உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

80வது ரஷ்ய வெற்றி தின நினைவு நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக்கொண்டார்

ரஷ்யாவின் 80வது வெற்றி தின நினைவு விழா திங்கள்கிழமை (மே 5) கொழும்பில் உள்ள ரஷ்ய இல்லத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) போரின் போது மேட்கொள்ளப்பட்ட தியாகங்களை கௌரவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவரான திருமதி. செவரின் சப்பாஸ், இன்று மே 05 கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திருகோணமலையில் கடற்படையின் EOD & CBRNE நிபுணர்கள் தந்திரோபாய மேம்படுத்தல் பயிட்சியில் ஈடுபட்டனர்

வெடிபொருள் அகற்றல் மற்றும் வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (EOD & CBRNE) குறித்த சிறப்புப் பயிற்சித் நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படையைச் சேர்ந்த (SBS) மொத்தம் 24 பேர் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவை சேர்ந்த (INDOPACOM) மூன்று உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த திட்டம் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும் EOD மற்றும் CBRNE பதில் நுட்பங்களில் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதாக கடற்படை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதில் பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நகதானி ஜென் சனிக்கிழமை மே 3 இலங்கைக்கு வந்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை-பாகிஸ்தான் 5வது பாதுகாப்பு கலந்துரையாடல்
வெற்றிகரமாக நிறைவடைந்தது

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், 5வது இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடல் ஏப்ரல் 30 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏப்ரல் 28 அன்று தொடங்கிய உயர்மட்ட கலந்துரையாடல்கள், இரு நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை ஒன்றிணைத்து, தற்போதுள்ள பாதுகாப்பு மற்றம் ஒத்துழைப்பு கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்யவும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் வழிவகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) வியாழக்கிழமை (மே 01) பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப் அவர்களை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியை சந்தித்தார்

தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு உரையாடல்
மூலோபாய உறவுகளை வலுப்படுத்துகிறது

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், 5வது வருடாந்த இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடள் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆரம்பமாகியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘IMDEX Asia - 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 09 வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் (9th IMSC) பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலானது தீவிலிருந்து புறப்பட்டது

சிங்கப்பூர் கடற்படையினால் ஏற்பாடு செய்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கப்பலானது, கடற்படை மரபுப்படி சிங்கப்பூரின் செங்காய் (Changi) துறைமுகத்திற்கு 2025 ஏப்ரல் 27 அன்று காலை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மியான்மாரில் நிவாரணப் பணிகளுக்கு சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

மியான்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், இன்று (ஏப்ரல் 26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக (BIA) நாடு திரும்பியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இரங்கல் செலுத்தினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று காலை (ஏப்ரல் 25) வத்திகான் தூதரகத்திற்கு விஜயம் செய்து பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான நலன்புரி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கான நலன்புரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று மற்றும் இன்று (ஏப்ரல் 22 & 23) கண்டிக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை-கொரிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil