செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகின்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025 உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது

2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜூன் 5 ஆம் தினதி பட்டப்படிப்பு கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் "நமது உலகம், நமது பொறுப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இது சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

08 வது இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது

இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜூன் 05) நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்த இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இலங்கை பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களை சந்தித்தார்

இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங், இன்று (ஜூன் 05) இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திருமதி மகேஷிகா கொலோன்னே, இன்று (ஜூன் 5) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கப்பலுக்குள் நுழைதல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் குறித்த பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் கடல்சார் அதிகார வரம்பு விழிப்புணர்வு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தால் (United Nations Office on Drugs and Crime - UNODC) திருகோணமலை சிறப்பு கப்பல் படை தலைமையகம் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட படகுகளில் நுழைதல், சோதனை செய்தல் மற்றும் கைப்பற்றுதல் முறைகள் (Regional Visit, Board, Search, and Seizure - VBSS) தொடர்புடைய பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்த்துடன், மேலும் சான்றிதழ் வழங்கும் விழா 2025 மே 30, சிறப்பு கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மட்டக்களப்பின் நிலைமைகளை பாதுகாப்பு
செயலாளர் நேரில் ஆராய்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேரில் சென்று பார்வையிட்டதுடன்(ஜூன் 03) அது தொடர்பிலான மதிப்பிடுகளையும் மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை - அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மார்ல்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) உடன் இன்று (ஜூன் 03) கொழும்பில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீவன்சும் இதன்போது சமூகமளித்திருந்தார்.    


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மனித-யானை மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவது குறித்து கலந்தாலோசிக்க, பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (ஜூன் 2) கொழும்பு 5, நாரஹேன்பிட்டை நில மெதுரவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) கூடியது

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கான விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு

ஓய்வுபெற்ற போர் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் (W&OP) வழங்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (மே 30) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்கள் மற்றும் போர் வீரர் குடும்பங்ககுகளின் நலன் தொடர்பில் பொது தினத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு

போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர் குடும்பங்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் அதன் அயராத அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் முகம் கொடுக்கும் நிர்வாக பிரச்சினைகள் மற்றும் நலன்புரி வசதிகள் தொடர்பில் தீர்வு வழங்க இன்று (மே 30) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தினத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதன்கிழமை (மே 28) நடைபெற்ற பொது தினத்தை தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட இந்நிகழ்வுகள் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்

இலங்கை கடற்படையினரால் (SLN) கைப்பற்றப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்களை பார்வையிடுவதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 28) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல் இப்ராஹிம், இன்று (மே 27) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தோனேசிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இந்தோனேசிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திருமதி. தேவி குஸ்டினா டோபிங், இன்று (மே 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய நீர்வரைவியலாளர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கையின் தேசிய நீர்வரைவியலாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, திங்கட்கிழமை (மே 26) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் அனுசரணையில் 2025 மே 19 முதல் கொழும்பில் நடைபெறுவதுடன், இதற்கு இணையாக மாநாட்டில் பங்கேற்ற ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் 2025 மே 20 அன்று பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாடு நிறைவடைந்தது

இன்று (மே 23) கொழுபு கிராண்ட் மேட்லண்ட ஹோட்டலில் நடைபெற்ற 80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் தூயகொந்தா தலைமை தாங்கினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி
வெற்றிகரமாக நிறைவடைந்தது

7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி நேற்று (மே 21) ஜெனரல் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் மேதகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் RCDS பிரதிநிதிகளுடன்
மூலோபாய கலந்துரையாடலில் ஈடுபட்டார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 21) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில், ஐக்கிய இராச்சியத்தின் (UK) ரோயல் பாதுகாப்பு ஆய்வுகள் கல்லூரியின் (RCDS) பிரதிநிதிகளுடன் நடந்த மூலோபாய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு கூட்டத்தில்
பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்

தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு (NASC) இன்று (மே 21) பத்தரமுல்லையில் உள்ள மகநெகும - மகாமெதுர வளாகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்குழுவின் இணைத் தலைவரான பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.