செய்திகள்
பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து அனர்த்த நிவார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert நேற்று (டிசம்பர் 15) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) மூன்றாவது தடவையாக கூடியது
சமீபத்திய இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) தனது மூன்றாவது கூட்டத்தை இன்று (டிசம்பர் 15) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) வளாகத்தில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் நடத்தியது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.
Tamil
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எரிபொருள் மிதவையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை கடற்படையும் கடலோர காவல்படையும் இணைந்து கட்டுப்படுத்தி வருகின்றன
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று (2025 டிசம்பர் 14,) காலை எரிபொருள் மிதவையில் இருந்து தற்செயலாக ஏற்பட்ட கசிவு காரணமாக, கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.
மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து அமெரிக்க மற்றும் இந்திய விமானப்படை
விமானங்கள் இலங்கையை விட்டு வெளியேறின
Ditwah சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன. அனர்த்த நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக, டிசம்பர் 7 முதல் 13 வரையான காலத்திற்குள் இரண்டு அமெரிக்க விமானப்படை C-130J விமானங்கள் 60 Marines படையினருடன் இலங்கைக்கு வந்தடைந்தன.
Tamil
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின்
சிறப்புப் படைவீரர்கள் ஆதரவு அளித்தனர்
புஸ்ஸல்லாவை Frotoft தோட்டம் வரை போக்குவரத்து தடைபட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இலங்கை
இலங்கையில் மனிதாபிமான பணிக்காக இந்திய இராணுவத்தின் 60 வது கள மருத்துவமனைக்கு பாராட்டு
பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியை அடுத்து இந்திய இராணுவத்தின் 60 கள மருத்துவமனை வழங்கிய அனரத்த நிவாரண மருத்துவ உதவி, அதன் விதிவிலக்கான மனிதாபிமான தாக்கம் மற்றும் தொழில்முறை சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக 2025 டிசம்பர் 14 அன்று பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் பாராட்டு வழங்கப்பட்டது.
இராணுவத் தளபதி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதியில் இராணுவ படையினரின் உதவியுடன் நடைபெற்று வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, 2025 டிசம்பர் 13 மற்றும் 14ம் திகதிகளில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதிக்கு விஜயம் செய்தார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்
அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹேலிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி, வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது
இலங்கையின் ஓரு முன்னணி கையுறை உற்பத்தியாளரான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி (டிபிஎல்), நிறுவனம் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 பாதுகாப்பு கையுறைகளை நன்கொடையாக வழங்கியது.
இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகத்தின் புதிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்திரற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ ஆலோசகர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர, இன்று (டிசம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
வெளிநாட்டு நிவாரண உதவிக்கான உயர்மட்ட தேசிய குழு பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் NDRSC களஞ்சியசாலைக்கு விஜயம் செய்தார்
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்திற்கு இன்று (டிசம்பர் 12) பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிவாரண உதவிகளின் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
Platypus Link மற்றும் Texlin Global வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்தன
Platypus Link (Pvt) Ltd மற்றும் Texlin Global (Pvt) Ltd நிறுவனங்கள் சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கின.
தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க Blue Skies Aviation Solutions (Pvt) Ltd
விமான மசகு எண்ணெய்யை அன்பளிப்பு செய்தது
இலங்கையின் முன்னணி விமான சேவை வழங்குநர்களில் ஒன்றான Blue Skies Aviation Solutions (Pvt) Ltd, இலங்கை விமானப்படைக்கு ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள விமான மசகு எண்ணையை தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்காக அன்பளிப்பு செய்துள்ளது.
நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர் பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ள
நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்தனர்
கொழும்பு நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு அமைச்சுக்கு ஒரு தொகை வெள்ள நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தனர். கல்லூரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்து இவற்றை கையளித்தனர்.
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக இராணுவத் தளபதி சிலாபத்திற்கு விஜயம்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி சிலாபத்தில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கள விஜயம் மேற்கொண்டார்.
இலங்கைக்கு ரஷ்யா மனிதாபிமான உதவிகளை வழங்கியது
இலங்கைக்கு ரஷ்யாவின் மனிதாபிமான உதவி அன்பளிப்பு இன்று (டிசம்பர் 10) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெற்ற நிகழ்வொன்றில் கையளிக்கப்பட்டது.
DSCSC யின் கல்வி பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளர்
iPad களைப் வழங்கினார்
DSCSC பாடநெறி எண். 19 இல் பங்கேற்பாளர்களுக்கான விரிவுரையாற்ற அங்கு விஜயம் செய்த போதே பாதுகாப்புச் செயலாளர் இவற்றை வழங்கினார்.
பாதுகாப்பு செயலாளர் DSCSC இல் விரிவுரை நிகழ்த்தினார்
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC)பாடநெறி எண் 19 இன் பங்கேற்பாளர்களுக்கு விரிவுரை நிகழ்த்தினார்.
சூறாவளியினால் சேதப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை பழுதுபார்க்க
இலங்கை இராணுவத்தின் உதவி
அண்மையில் இலங்கையை தாக்கிய சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை அவசரமாக பழுபார்க்க இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தத்திற்கு பிந்தைய உதவிப் பணிகளில் இலங்கை இராணுவம் மும்முரம்
தேசிய அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தொடரும் வகையில், அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்ப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கு இலங்கை இராணுவம் பல மாவட்டங்களுக்கு படையினரை அனுப்பியுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு உதவ மற்றொரு IAF MI-17V5 ஹெலிகொப்டர் இலங்கைக்கு வந்தது
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ மற்றொரு இந்திய விமானப்படை (IAF) Mi-17V5 ஹெலிகொப்டர் நேற்று (டிசம்பர் 09) நாட்டிற்கு வந்தடைந்ததாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவிக்கிறது.




















