செய்திகள்
அனர்த்த நிவாரண நடவடிக்கைக்காக இரண்டு அமெரிக்க
C-130 விமானங்கள் வந்தடைந்தன
இலங்கையில் மேட்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களைக் கொண்ட சிறப்பு குழு அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130 Hercules போக்குவரத்து விமானங்களில் இன்று (டிசம்பர் 07) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்தது.
Tamil
அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான 'DECISIVE' கப்பலை இலங்கை கடற்படை
உத்தியோகப்பூர்வமாகப் ஏற்றுக்கொண்டது
அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்க கடலோர காவல்படையின் ‘DECISIVE’ கப்பல் (EX USCGC DECISIVE) உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வானது, அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ‘பெல்டிமோர்’ இல் அமைந்துள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்தில் 2025 டிசம்பர் 02, அன்று நடைபெற்றதுடன், மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் பங்கேற்றார். அதன்படி, 2025 டிசம்பர் 02, முதல் P 628 என்ற கொடி எண்ணின் கீழ் இலங்கை கடற்படையில் சேரும் இந்தக் கப்பல், அன்றைய தினம் முதல் அதன் பிரதான கம்பத்தில் இலங்கை தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றும்.
“இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” நிகழ்ச்சி திட்டத்திற்கு லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனங்களை நன்கொடையாக வழங்கியது
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட "இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் தேசிய மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ. 65 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு SLT-MOBITEL முக்கியமான
தகவல் தொடர்பு ஆதரவை வழங்குகிறது
நாட்டில் மேட்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்த SLT-MOBITEL முக்கிய தொலைத் தொடர்பு ஆதரவை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நிவாரண நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைப்பதில் தடையற்ற தகவல் தொடர்புகளை பேணுவது மிக அவசியமானதாகும்.
Tamil
ஜெர்மன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஜெர்மன் கூட்டாட்சி குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Klaus Willi Merkel, இன்று (டிசம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி
இறுதி அஞ்சலி செலுத்தினார்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி
கடுமையான மோசமான வானிலை காரணமாக தேசிய அளவில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின் மேட்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுமுகமாக ஜப்பான் வழங்கிய ஒரு தொகுதி மனிதாபிமான உதவி பொருட்கள் இன்று (04 டிசம்பர்) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை
நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி
தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 3,250,000.00 நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
தேசிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உயர் அழுத்த சுத்திகரிப்பு உபகரணங்கள்
Tudawe Trading நிறுவனம் அன்பளிப்பு செய்தது
பாதுகாப்பு அமைச்சில் இன்று (03 டிசம்பர்) நடைபெற்ற நிகழ்வொன்றில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மாஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், Tudawe Trading Pvt Ltd நிறுவனம் அன்பளிப்பு செய்த உயரழுத்த சுத்திகரிப்பு உபகரணங்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார்.
இந்தியா தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளை அனுப்பி இலங்கையின்
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி
பிராந்திய கூட்டாண்மைக்கான ஆழமான அர்ப்பணிப்பையும் விரைவான செயல்திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையை சமாளிக்க இலங்கையின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, இந்திய கடற்படை பல கப்பல்களின் மூலம் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
மோசமான வானிலைக்கு மத்தியில் பாக்கிஸ்தான் கடற்படை
இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்கியது
பிராந்திய ஒத்துழைப்பையும் மனிதாபிமான ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க பாக்கிஸ்தான் கடற்படை குறிப்பிடத்தக்க அனர்த்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இந்த நிவாரணப் பொருட்கள் சர்வதேச கப்பல் அணிவகுப்பு விழாவில் (International Fleet Review) பங்கேற்க கொழும்பில் இருந்த PNS SAIF கடற்படை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டன. மனிதாபிமான உதவி 2025 நவம்பர் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. இது நாட்டின் மிக அவசர காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த உதவியாகும்.
அனர்த்த நிவாரணத்திற்காக இந்திய இராணுவ மருத்துவக்
குழு இலங்கைக்கு வந்தது
கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக முழுமையாக செயல்படும் ஒரு இந்திய இராணுவ கள மருத்துவமனை, நேற்று (02 டிசம்பர்) இலங்கைக்கு வந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மனிதாபிமான உதவி: அனர்த்த நிவாரணத்துக்காக C-17 விமானம் இலங்கையை வந்தடைந்தது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வான் படையின் C-17 விமானம், நேற்று (02 டிசம்பர்) அனர்த்த நிவாரண மனிதாபிமான உதவிப் பொருட்களின் ஒரு தொகுதியுடன் இலங்கையை வந்தடைந்தது.
அனர்த்த நிவாரணத்திற்காக இந்திய விமானப்படை BHISHM க்யூப்களை
இலங்கைக்கு அனுப்பியது
இந்திய விமானப்படையின் (IAF) C-130J விமானத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு BHISHM க்யூப்கள், 30 நவம்பர் 2025 அன்று இலங்கையை வந்தடைந்தன. விங் கமாண்டர் சஞ்சய் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இந்திய விமானப்படை மருத்துவக் குழுவும் இத்துடன் வந்தது. இவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வரவேற்றனர்.
அவசரகால நடவடிக்கை நிலையத்தின் செயற்பாடுகளை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அவசர நடவடிக்கை மையத்தை (EOC) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர நேற்று (டிசம்பர் 01) பார்வையிட்டார்.
அனர்த்த நிவாரண நடவடிக்கைகள்குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார்
நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மெத்யூ ஹவுஸ் இன்று (செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 02, 2025) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்.
முப்படைகள் அனர்த்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றன
மோசமான வானிலை காரணமாக அதிகரித்து வரும் நீர் மட்டத்தால் உருவான வெள்ள நிலைமைகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதித்துள்ளன. இந்நிலையில், இலங்கை முப்படைகள் நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தரை, நீர் மற்றும் வான்வழி உதவிகளை விரிவுபடுத்தியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள உலர் உணவுப் பொருட்களை பிரீமா நிறுவனம் நன்கொடையாக வழங்கியது
நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பிரீமா உலர் உணவுப் பொருட்களை பிரீமா நிறுவனம் நேற்று மாலை (நவம்பர் 30) நன்கொடையாக வழங்கியுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான
இடங்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்
பதுளை மாவட்டத்தில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் தொடர்பில் தேடிப்பார்த்து மதிப்பாய்வு செய்வதற்கும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) விஜயம் செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,300 க்கும் அதிகமான மக்களுக்கு இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவு உதவி
இலங்கை கடற்படை நாடு முழுவதும் அனர்த்த நிவாரணப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.


















