--> -->
நேற்று (ஜனவரி 17) கொழும்பு ரோயல் கல்லூரியின் MAS அரங்கில் நடைபெற்ற 96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Tamil
உலகப் பொருளாதார மன்றத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (ஜனவரி 13) சுவிட்சர்லாந்துக்கு பன்னிரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கள்கிழமை (ஜனவரி 8) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை இலங்கை கடற்படையின் நிவாரணக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக நலப் பணியாக மேற்கொள்ளப்படும் பாடசாலை புனரமைப்புத் திட்டத்தின் கீழ், காங்கேசன்துறை மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் புதிய பிரதான மண்டபக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (ஜன. 6) பாடசாலையில் இடம்பெற்றது.
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் மேலதிகச் செயலாளர் - (பாதுகாப்பு) திரு.ஹர்ஷ விதானாராச்சி 2024 ஜனவரி 01ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
நான்காவது இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (ஜனவரி 03) ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கியதுடன், பாகிஸ்தான் பிரதிநித்துவப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஸமான் கான் தலைமை வகித்தார்.
கொழும்புத்துறையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஏழை குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் 17வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் புதிய வீடொன்றை நிர்மாணித்து பயனாளி குடும்பத்திற்கு அண்மையில் கையளித்தனர்.
சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சோமாவதி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நேற்று (டிசம்பர் 31) விஜயம் செய்துள்ளார்.
புத்தாண்டின் முதல் நாளான இன்று அமைச்சின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் இன்று (ஜனவரி 1) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். "கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது" அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமைய பிரார்த்திப்போம்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு, இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 நேற்று (டிச. 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எஸ்.எஸ் பிரதீப் மலேசியாவில் டிசம்பர் 10 - 18 திகதிகளில் அண்மையில் நடைபெற்ற ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2023’ போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
கடந்த திங்கட்கிழமை (18) பிற்பகல் தொடக்கம் 48 மணி நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 109 குடும்பங்களைச் சேர்ந்த 228 பொதுமக்கள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8வது இராணுவ பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.