செய்திகள்
கடற்படையின் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை ஜனாதிபதி
அவதானத்துடன் கவனித்தார்
கலாஓயாவில் வெள்ள நீரில் சிக்கிய பஸ் ஒன்றில் இருந்த மக்களை பாதுகாப்பாக மீட்ட இலங்கை கடற்படையின் விரைவான மற்றும் துணிச்சலான நடவடிக்கையை சிறப்பு நடவடிக்கை அறையில் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உன்னிப்பாகக் அவதானித்தார்.
இலங்கை கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் மும்முரம்
மிக மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இலங்கை கடற்படை மொத்தமாக 141 அனர்த்த நிவாரணக் குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. 2025 நவம்பர் 29 ஆம் திகதி காலை 0730 மணி நிலவரப்படி, அந்தக் குழுக்களில் 79 குழுக்கள் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . நவம்பர் 22 ஆம் திகதி நிவாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, பாதிப்புக்குள்ளான 900 க்கும் மேற்பட்ட நபர்களை பாதுகாப்பாக மீட்கவும், சுமார் 2000 பேரை கடற்படை படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியான அனர்த்த நிவாரண
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
பாதுகாப்புப் படைகள் (மத்திய) மற்றும் 12வது காலாட்படை படையினர் மொனராகலை மாவட்டம் முழுவதும் வெல்ல நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிகவரட்டிய மற்றும் தொம்பையில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேர்
இலங்கை விமானப் படைவினரால் மீட்பு
இலங்கை விமானப் படையினர், இன்று காலை (29 நவம்பர்) இரண்டு அவசர மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்களை ஏற்றிச் வந்த இந்திய விமானப்படையின் C-130 விமானம் (2025.11.29) இன்று அதிகாலை 01.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
மிகவும் மோசமான காலநிலைக்கு மத்தியில் இராணுவத்தினர்
மீட்பு நடவடிக்கைகளை மேட்கொண்டனர்
கைலகொட முதியோர் இல்லத்தில் இருந்து 38 முதியவர்களை இராணுவத்தினர் மீட்டு, தொடர்ச்சியான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய உதவிக்காக அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
பொலன்னறுவையில் சிக்கித் தவித்த 13 நபர்களை விமானப்படை விமான மீட்பு
சீரற்ற காலநிலை காரணமாக பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் சிக்கித்தவித்த 13 பேர் இன்று (28.11.2025) காலை இலங்கை விமானப்படை ஹிங்குரக்கொடை தளத்தின் 7வது ஹெலிகொப்டர் படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-212 ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முப்படைகள் உயர் தயார் நிலையில்: சீரற்ற காலநிலைக்கு மத்தியில் அவசர நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன
தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவசர நிலைமைகளுக்கு பதிலளிக்க முப்படை வீரர்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய அனர்த்த முகாமைத்துவ குழு ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் கூடியது
நாட்டைப் பாதித்துள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அவசர நிலைமையை ஆராயும் பொருட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ குழு நேற்று மாலை (நவம்பர் 27) பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டம் நடைபெற்றது
சீரற்ற வானிலை காரணமாக நாடு கடுமையான அனர்த்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் பதுளை மாவட்டம் அதிகம் பதிப்பிக்கு உற்பட்டுள்ளது. நிலவும் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க, உடனடி மற்றும் உயர் மட்ட அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகளை உள்ளடக்கிய பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு, நேற்று (நவம்பர் 27) இரவு 0730 மணிக்கு பதுளை மாவட்ட செயலகத்தில் கூடியது. இதன் போது அனர்த்த தணிப்பு, நிவாரண ஏற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது
தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) பாடநெறி எண் 4 இன் பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 27) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) பட்டக்கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டனர்
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலநிலை நடவடிக்கை மற்றும் அனர்த்த தடுப்பு குறித்த 9வது ABU
ஊடக உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது
9வது ABU காலநிலை நடவடிக்கை மற்றும் அனர்த்த தடுப்பு ஊடக உச்சி மாநாடு (CADP 2025) இன்று (நவம்பர் 25) Mount Lavinia ஹோட்டலில் ஆரம்பமாகியது. ஊடகங்கள் மூலம் காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்த மூன்று நாள் நிகழ்வில் பிராந்திய ஊடகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அனர்த்த-ஆபத்து நிபுணர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
54வது பங்களாதேஷ் ஆயுதப்படை தின விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்
நேற்று மாலை (நவம்பர் 24) கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற பங்களாதேஷின் 54வது ஆயுதப்படை தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ - சியம்பலாகொட பாதையில் உயர்தர மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க இலங்கை இராணுவ 3 (V) கெமுனு பிரிவின் படையினர் உதவி
பனசுகம பகுதியில் உள்ள அக்குரெஸ்ஸ - சியபம்லாகொட பாதை வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தின் 613 காலாட் படையணியின் கெமுனு வாட்ச் (3 தொண்டர்) படையினர் உடனடி நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இராணுவத்தின் 8 SR படையினர் கடுகண்ணாவை நிலச்சரிவு மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்
பஹல கடுகண்ணாவையில் இன்று (நவம்பர் 22) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 8வது சிங்க படைப்பிரிவைச் (8 SR) சேர்ந்த வீரர்கள் உடனடி தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையைத் ஆரம்பித்துள்ளனர்.
நெலுவவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயர்தர மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு படையினர் உதவினர்
573 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை இலகுரக காலாட்படை (20 SLLI) படையினர், இன்று (நவம்பர் 22) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெலுவவில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காக நடவடிக்கை ஏடுத்துள்ளனர்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது NSA-நிலைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக
இலங்கை - இந்தியா இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தின.
மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட
முகாமைத்துவ முறையை பின்பற்ற பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
செயல்திறனை மேம்படுத்துவதற்கான முற்போக்கான நடவடிக்கையாக, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ (RBM) நிறுவனமயமாக்கல் குறித்த சிறப்பு அமர்வு கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் (MOD) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் அனைத்து அரச நிறுவனங்களிலும் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்ததாக நடைபெற்றது.
தேசிய அனர்த்த தயார்நிலை திட்டங்களின் முன்னேற்றத்தை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்
இலங்கையின் அனர்த்த தயார்நிலை மற்றும் தணிப்பு முயற்சிகள் குறித்த உயர்மட்ட முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டம் இன்று (நவம்பர் 17) அனர்த்த முகாமைத்துவ பிரிவு காரியாலயத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), வானிலை ஆராய்ச்சி திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO), தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
ஆயுதப்படை நினைவு தினம் 2025 மற்றும் பொப்பி மலர் தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் பாதுகாப்பு செயலாளரும் பங்கேற்பு
81வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் நடத்தப்பட்டது.
அமெரிக்காவும் இலங்கையும் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் இன்று (நவம்பர் 14) பாதுகாப்பு அமைச்சில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன.
சட்டவிரோத மீன்பிடித்தல் தடுப்பு நடவடிக்கைகளைத் எடுப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடித்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான உத்திகளை ஆய்வு செய்வதற்காக நவம்பர் 11 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.




















