பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஐந்தாவது HL-FRAC
கூட்டம் நடைபெற்றது
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
எகிப்திய தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதர், மேதகு Adel Ibrahim அவர்கள், நேற்று (டிசம்பர் 23) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சவால்மிக்க சந்தர்ப்பங்களில் பின்வாங்காமல் தமது பொறுப்புகளை நிறைவேற்றும்
போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும்
ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
புப்புரெஸ்ஸவில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் மருத்துவ முகாம்
அண்மையில் ஏட்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (MoD SVU), பெண் மருத்துவர்கள் சங்கத்துடன் (LDA) இணைந்து, டிசம்பர் 20 அன்று ஒரு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது.
இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரி பயிலிவளல் அதிகாரிகளின்
இறுதி விளக்கக்காட்சி
பாடநெறி இல.93, 94பி, குறுகிய கால பாடநெறி இல 21 சீ மற்றும் குறுகிய கால பாடநெறி இல 23, பெண் பாடநெறி 20, 62 (தொ) மற்றும் பெண் (தொ) பாடநெறி 19 ஆகியவற்றின் பயிலிவளல் அதிகாரிகளின் கல்வி மற்றும் இராணுவப் பயிற்சியின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் இறுதி விளக்கக்காட்சி 2025 டிசம்பர் 20 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடவடிக்கை
அறையொன்றை செயற்படுத்த பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தல்
தற்போதைய பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட நடவடிக்கை அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழு (HL-FRAC) வின் நான்காவது அமர்வு பாராளுமன்றத்தில் நடைபெற்றது
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) நான்காவது அமர்வு, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
பாங்கொல்லையில் உள்ள அபிமன்சல-3 இல் வெள்ளப் பாதிப்புகளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆய்வு செய்ய விஜயம் செய்தார்
பாங்கொல்லவில் உள்ள அபிமன்சல-3 மறுவாழ்வு மையத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சமீபத்தில் (டிசம்பர் ௧௪) அங்கு விஜயம் செய்தார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொதுமக்களுக்கான
விசேஷ உதவி மையம் ஸ்தாபிப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, விசேட பொதுமக்கள் உதவி மையம் (Public Assistance Helpdesk) ஒன்று எதிர்வரும் 2025 டிசம்பர் 21ஆம் திகதி முதல் காலி முகத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டவுள்ளது.
கடும் வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை
கடற்படையினர் வெற்றிகரமாக முடிதனர்
"தித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது, மேலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்றும் விறகுகள் உள்ளிட்ட குப்பைகள் பேராதெனியவில் உள்ள கலுபாலம் ரயில் பாலத்திலும், நில்லம்பவில் உள்ள கலுகமுவ பாலத்திலும் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதைத் தடுத்து, கடற்படை சுழியோடி உதவி மற்றும் அந்தப் பாலங்களை புணரமைக்க தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் 2025 டிசம்பர் 14 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண உதவி ஒருங்கிணைப்பு தொடர்பில் ஐ.நா. வதிவிட
ஒருங்கிணைப்பாளருடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheவை தனது அலுவலகத்தில் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நிறுவன மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
Yoo Brands அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது
Yoo Brands (Pvt) Ltd நிறுவனம், தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, பாதுகாப்பு அமைச்சிற்கு அத்தியாவசிய காலணிப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கான ‘‘செனெஹச’’ உணர்வு பூங்காவை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் திறந்து வைத்தார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (17 டிசம்பர்) 'செனெஹச' கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம் (SERRIC) வளாகத்தில் புனரமைக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா மற்றும் உணர்வு (Sensory) பூங்காவையும் திறந்து வைத்தார்.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கம்
தொடர்பான கூட்டம் நடைபெற்றது
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், நேற்று (டிசம்பர் 16) பாதுகாப்பு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
கொழும்பில் கத்தார் தேசிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
கொழும்பில் உள்ள கத்தார் தூதரகம் நேற்று (டிசம்பர் 16) கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீபா ஹோட்டலில் கத்தார் தேசிய தினத்தைக் கொண்டாடியது.
DSCSC கல்லூரியின் பட்டமளிப்பு விழா நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) - பாடநெறி எண் 19 இன் பட்டமளிப்பு விழா நேற்று (டிசம்பர் 16) கொழும்பில் உள்ள நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது.
பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து அனர்த்த நிவார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert நேற்று (டிசம்பர் 15) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) மூன்றாவது தடவையாக கூடியது
சமீபத்திய இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) தனது மூன்றாவது கூட்டத்தை இன்று (டிசம்பர் 15) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) வளாகத்தில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் நடத்தியது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எரிபொருள் மிதவையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை கடற்படையும் கடலோர காவல்படையும் இணைந்து கட்டுப்படுத்தி வருகின்றன
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று (2025 டிசம்பர் 14,) காலை எரிபொருள் மிதவையில் இருந்து தற்செயலாக ஏற்பட்ட கசிவு காரணமாக, கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.
















