பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொது தினத்தன்று யுத்த வீரர்கள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்பங்களின் தேவைகள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு

யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (ஜூலை 16) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்த வீரர்களை கௌரவித்தல்: பொது தினத்தில் முன்முயட்சி

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (ஜூலை 15) அவரின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில், யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் பிரெஞ்சு பாஸ்டில் தின கொண்டாட்டங்கள்

உலகளவில் Fête nationale அல்லது பாஸ்டில் தினம் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு தேசிய தினம் நேற்று (ஜூலை 14) கொழும்பில் உள்ள Galle Face Hotel நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளை கலந்துக்கொண்ட இந்நிகழ்விவு இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீடித்த உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் மற்றும் போலகலை முன்னாள் படைவீரர் இல்லத்திற்கு விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் போலகலை படைவீரர் இல்லம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வியட்நாம் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான வியட்நாம் சோசலிச குடியரசின் தூதுவர் திருமதி டிரின் தி டாம், இன்று (ஜூலை 11) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மறைந்த மற்றும் போர்வீரர்கள் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகள்
குறித்து பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்க உறுதி

இன்று (ஜூலை 09) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில், போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர்வீரர் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அதன் அர்ப்பணிப்பை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தேசத்திற்காக்க இவர்கள் மேட்கொண்ட தன்னலமற்ற சேவைக்காக ஆதரவளிப்பதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த
முன்னேற்ற ஆய்வு கூட்டம்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூலை 8) பாதுகாப்பு அமைச்சில் ஒரு முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாரஹேன்பிட்டவில் இலங்கை விமானப்படை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இம்மருத்துவமனை விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் பாதுகாப்பாக ட்கப்பட்டனர்

கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த இந்திய மீன்பிடி படகிலிருந்து நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் 2025 ஜூலை 06 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு லெபனான்
ஐ.நா. அமைதி காக்கும் கடமைகளை பொறுப்பேற்பு

16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை 2025 ஜூலை 04 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தளத்தில் நிறுவப்படும் டொப்ளர் வானிலை ரேடார் தளத்தை
பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்

இலங்கையின் வானிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டுவரும் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று (ஜூலை 05) பார்வையிட்டார். ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் நாடளாவரீதியில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதையும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காயமடைந்த யானை 'பாத்தியா'வுக்கு சிகிச்சையளிக்க இராணுவத்தினால் உதவி

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவெரட்டிய மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த பாத்தியா என்ற காட்டு யானை, சமீபத்தில் நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பேரா வாவி கடல் விமான நடவடிக்கைகள் புதிய அத்தியாயத்திற்கு தயாராக உள்ளன

இலங்கையின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு புதுப்பிக்கப்பட்ட உயிர்ச்சக்தியைக் கொண்டுவரும் ஒரு முயற்சியான பேரா வாவி நீர் விமான நிலையமாக மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 03) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க தூதகரத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் Matthew House, இன்று (ஜூலை 03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (KDU IRC) 2025

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், '‘Bridging Frontiers: Interdisciplinary Research for Sustainable Progress’,' என்ற தலைப்பில் அதன் 18வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை (KDU IRC-2025) செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2025 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கொழும்பில் உள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூலை 02) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு தலைமையக வளாக நிர்மாணம திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மதிப்பாய்வு

பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாண திட்டம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 1, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் விஷேட நடவடிக்கை

கொக்கல பகுதிக்கு தெற்கே கடற்கரையில் ஐந்து மீனவர்களை ஏற்றிச் சென்ற ஒரு இழுவைப் படகு இன்று (ஜூன் 28) காலை கவிழ்ந்தது, மேலும் அளுத்கமாவில் கரை ஒதுங்கிய மற்றொரு வெற்று டிங்கி படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உடனடி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவ பிரதம அதிகாரி பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் D K S K தோலகே USP nps psc, இலங்கை இராணுவத்தின் 67வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு சர்வதேச சமூகத்திற்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (US Institute for Security Governance) (ISG) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் வெவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தது. இதன்போது இராணுவ திறன் வளர்த்தல் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழு, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“நீங்கள் அளவிடாததை உங்களால் நிர்வகிக்க முடியாது”: இலங்கை 2025 ஆம் ஆண்டு உலக நீர்வரைவியல் தினத்தைக் கொண்டாடுகிறது

ஜூன் 24 அன்று வெலிசர வேவ்'ன் லேக் கடற்படை மண்டபத்தில் நடைபெற்ற 2025 உலக நீர்வரைவியல் தின ட(Hydrographic Day) கொண்டாட்டத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். "“Seabed Mapping: Enabling Ocean Action” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரமுகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் நீர்வரைவியல் துறை நிபிணக்குகள் பலரும் கலந்துக்கொண்டனர்.