பாதுகாப்பு செய்திகள்
இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இந்திய தூதகரத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே இன்று (ஆகஸ்ட் 19) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
அமெரிக்காவின் USS SANTA BARBARA கப்பலை பாதுகாப்பு
பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 16) வருகைதந்த USS SANTA BARBARA (LCS) என்ற அமெரிக்க கடற்படையின் போர் கப்பலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பார்வையிட்டார்.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும்
திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
புதிய ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் Colonel Keith Miles, இன்று (ஆகஸ்ட் 14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயாகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கைககான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பொது தினத்தில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் படைவீரர்
குடும்பங்களின் நலனில் கவனம் செலுத்தபட்டது
ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கான பாதுகாப்பு அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பொது தின நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 13) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டம்
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (ஆகஸ்ட் 12) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மனித விற்பனை
அபாயம் குறித்து தேசிய மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) அறிவுறுத்தியுள்ளது
இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து புதிய முறையில் மேற்கொள்ளப்படும் மனித விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள் தொடர்பில் மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை (2026-2030) பாதுகாப்புச் செயலாளரிடம் IOMனால் கையளிப்பு
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைமைத் தூதர் திருமதி. கிறிஸ்டின் பி. பார்கோ, மனித கடத்தலைக் கண்காணித்து மற்றும் எதிர்த்துப் போராடுவதற்கான 2026-2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை ஆகஸ்ட் 05 அன்று தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இலங்கைக்கு ரூ.400 மில்லியன் பெறுமதியான அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியது
சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேற்படி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது.
AEGIS LEXICON 2025 - பாதுகாப்பு சைபர் கண்காட்சி
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
பாதுகாப்பு அமைச்சசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு சைபர் கட்டளை (DCC), சமீபத்தில் (ஜூலை 29, 2025) அமைச்சு வளாகத்தில் AEGIS LEXICON 2025 - பாதுகாப்பு சைபர் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியது. ஆகஸ்ட் 03, 2023 அன்று நிறுவப்பட்ட DCC யின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வருடாந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இது டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களில் இலங்கையின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பொது தினத்தில் படை வீரர்களின் நலனுக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு
செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்
படை வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலன்புரி வசதிகள் தொடர்பில் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சு இன்று (ஆகஸ்ட்01) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயாகொந்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் பொது தின நிகழ்ச்சியை நடைபெற்றது.
பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ரெமி லம்பேர்ட், நேற்று (ஜூலை 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 98 வது ஆண்டு விழாவின் போது இலங்கை-சீன பாதுகாப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன
சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) நிறுவப்பட்டதன் 98வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு (ஜூலை 30) நடைபெற்றது.
தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியினால் கட்டாய உழைப்பு பயிற்சி திட்டத்திற்கு மனித கடத்தல் தொடர்பான பாடத்தொகுதி இணைப்பு
உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), தொழிலாளர் அமைச்சுடன் இணைந்து, கட்டாய உழைப்பில் கவனம் செலுத்தும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி இன்று (ஜூலை 30) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தொடங்கியது.
ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர் குடும்பங்களின் நலன் தொடர்பில் பொது நாளின் போது கவனம் செலுத்தப்பட்டது
ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர்களின் குடும்பத்தினரின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பொது நாள் நிகழ்ச்சியின் மூன்றாவது அமர்வு இன்று (ஜூலை 30) கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில்
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு
இலங்கையின் வலுப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 30) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை IDEF 2025 இல் பங்கு பற்றியதன் மூலம் துருக்கியுடனான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளது
உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான (IDEF 2025) என்ற 17வது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன், துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டு, துருக்கி ஆயுதப்படைகளினால் (TAFF) ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையானது விமானப்படையுடன் இணைந்து கடற்படையின் கடல்சார் செயற்பாட்டுச் சிறப்பினை வெளிப்படுத்தி திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025 (TRINEX - 25) ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025’ (TRINEX - 25) ஜூலை 22 முதல் 26 வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை கடல் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் நிறைவு விழா 2025 ஜூலை 27 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரலவில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர், பேச்சாளராக பிரிகேடியர்
பிரேங்க்ளின் ஜோசப் பதவியேற்றார்
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மறைந்த அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரருக்கு பாதுகாப்பு செயலாளர் இறுதி அஞ்சலி செலுத்தினார்
அஸ்கிரி பீடத்தின் சியாம் பிரிவின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் இறுதிச் சடங்குகள் நேற்று (ஜூலை 24) கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் அரச அனுசரணையுடன் நடைபெற்றன.
ஆசிய ஆயத்தநிலை கூட்டுமுயற்சி செயலமர்வில் பிராந்திய மீள்தன்மை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்
கொழும்பி Cinnamon Life at the City of Dreams இல் புத்தாள்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற ஆசிய ஆயத்தநிலை கூட்டுமுயற்சி (Asian Preparedness Partnership (APP) செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சிறப்பு உரை நிகழ்த்தினார்.