பாதுகாப்பு செய்திகள்
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்ட முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சில் கூட்டம்
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் உயர் மட்ட கூட்டமொன்று 03 பெப்ரவரி அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்கினார்.
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு பணிகளை
பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் மேட்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்யம் நோக்கில், பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோருடன் இன்று (02 பெப்ரவரி) அங்கு விஜயம் செய்தார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்
இலங்கையில் தனது சேவையை நிறைவு செய்து வெளியேறும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்-உல்-அசீஸ், இன்று (02 பெப்ரவரி) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
பொது தின நிகழ்வில் முன்னாள் போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்கள் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கவனம் செலுத்தினார்
முன்னாள் போர் வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனில் பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று (ஜனவரி 30) பொது தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேதகு மேத்யூ டக்வர்த், இன்று (ஜனவரி 29 ) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
78வது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான ஊடக சந்திப்பில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
78வது தேசிய சுதந்திர தின விழாவின் ஏற்பாடுகள் குறித்து விளக்கும் ஊடக சந்திப்பு இன்று (29 ஜனவரி) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
மனித விற்பனை எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டத்தை இலங்கை வெளியிட்டது
மனிதர்கள் விற்பனையை கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தை (2026-2030) மனிதர்கள் விற்பனைக்கு எதிரான தேசிய பணிக்குழு (NAHTTF) ஜனவரி 28, 2026 இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது அனைத்து வகையான மனித விற்பனைகளை ஒழிப்பதற்கும் ஒருங்கிணைந்த தேசிய பதிலளிப்புகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தினார்
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் மேதகு Wiebe de Boer, நேற்று (ஜனவரி 26) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்கிரின் தலைமையில் கம்பஹாவில் பொது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
மக்களுடன் நேரடி தொடர்பையும் நெருக்கத்தையும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சு ‘பொது நாள்’ நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் மூலம் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள், மறைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்து, தீர்வு பெற எளிதான தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பணிக்காக 11வது இலங்கை விமானப்படை பிரிவு செல்லும் வேளை 10வது
விமானப்படை பிரிவு நாடு திரும்பியது
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் (MINUSCA) ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை விமானப்படையின் (SLAF) 11வது குழு கடந்த 21ஆம் (ஜனவரி) திகதி சென்றதுடன் அந்நாட்டில் ஒரு வருட சேவையை நிவர்த்தி செய்த 10வது விமானப்படை குழு நாடு திரும்பியது.
இரண்டு ஓமான் மற்றும் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை
ஓமான் ரோயல் கடற்படை மற்றும் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று (ஜனவரி 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
HL-FRAC கூட்டத்தில் ஆயுதப்படைகளின் ஆதரவு உட்பட பொறுப்புக்கூற லை
பிரதித் அமைச்சர் வலியுறுத்தினார்
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழு (HL-FRAC) தனது எட்டாவது கூட்டத்தை நேற்று (ஜனவரி 21) பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடத்தியது. வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்
இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.
நிக்கவரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ICU படுக்கையை நன்கொடையாக வழங்கியது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (MoD SVU) தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரதேசத்தின் தீவிர சிகிச்சை வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று (ஜனவரி 16) நிக்கவரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு ஒரு ICU படுக்கை அன்பளிப்பு செய்யப்பட்டது.
DSCSC யின் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) தளபதி, மேஜர் ஜெனரல் K. W. ஜயவீர, இன்று (ஜனவரி 16) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ தேசிய திட்டத்திற்கு இணங்க அனர்த்தத்திற்குப் பிந்திய தேவைகள் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல் குழு கூடியது
‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ எனும் தேசிய திட்டத்தை அரசாங்கம் ஜனவரி 13 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாவகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
















