பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழு (HL-FRAC) வின் நான்காவது அமர்வு பாராளுமன்றத்தில் நடைபெற்றது

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) நான்காவது அமர்வு, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாங்கொல்லையில் உள்ள அபிமன்சல-3 இல் வெள்ளப் பாதிப்புகளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆய்வு செய்ய விஜயம் செய்தார்

பாங்கொல்லவில் உள்ள அபிமன்சல-3 மறுவாழ்வு மையத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சமீபத்தில் (டிசம்பர் ௧௪) அங்கு விஜயம் செய்தார். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொதுமக்களுக்கான
விசேஷ உதவி மையம் ஸ்தாபிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, விசேட பொதுமக்கள் உதவி மையம் (Public Assistance Helpdesk) ஒன்று எதிர்வரும் 2025 டிசம்பர் 21ஆம் திகதி முதல் காலி முகத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடும் வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை
கடற்படையினர் வெற்றிகரமாக முடிதனர்

"தித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது, மேலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்றும் விறகுகள் உள்ளிட்ட குப்பைகள் பேராதெனியவில் உள்ள கலுபாலம் ரயில் பாலத்திலும், நில்லம்பவில் உள்ள கலுகமுவ பாலத்திலும் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதைத் தடுத்து, கடற்படை சுழியோடி உதவி மற்றும் அந்தப் பாலங்களை புணரமைக்க தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் 2025 டிசம்பர் 14 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண உதவி ஒருங்கிணைப்பு தொடர்பில் ஐ.நா. வதிவிட
ஒருங்கிணைப்பாளருடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheவை தனது அலுவலகத்தில் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நிறுவன மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

Yoo Brands அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது

Yoo Brands (Pvt) Ltd நிறுவனம், தேசிய அனர்த்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, பாதுகாப்பு அமைச்சிற்கு அத்தியாவசிய காலணிப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கான ‘‘செனெஹச’’ உணர்வு பூங்காவை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் திறந்து வைத்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (17 டிசம்பர்) 'செனெஹச' கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம் (SERRIC) வளாகத்தில் புனரமைக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா மற்றும் உணர்வு (Sensory) பூங்காவையும் திறந்து வைத்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கம்
தொடர்பான கூட்டம் நடைபெற்றது

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், நேற்று (டிசம்பர் 16) பாதுகாப்பு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் கத்தார் தேசிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கொழும்பில் உள்ள கத்தார் தூதரகம் நேற்று (டிசம்பர் 16) கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீபா ஹோட்டலில் கத்தார் தேசிய தினத்தைக் கொண்டாடியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

DSCSC கல்லூரியின் பட்டமளிப்பு விழா நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) - பாடநெறி எண் 19 இன் பட்டமளிப்பு விழா நேற்று (டிசம்பர் 16) கொழும்பில் உள்ள நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது. 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து அனர்த்த நிவார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert நேற்று (டிசம்பர் 15) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) மூன்றாவது தடவையாக கூடியது

சமீபத்திய இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) தனது மூன்றாவது கூட்டத்தை இன்று (டிசம்பர் 15) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) வளாகத்தில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் நடத்தியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எரிபொருள் மிதவையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை கடற்படையும் கடலோர காவல்படையும் இணைந்து கட்டுப்படுத்தி வருகின்றன

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று (2025 டிசம்பர் 14,) காலை எரிபொருள் மிதவையில் இருந்து தற்செயலாக ஏற்பட்ட கசிவு காரணமாக, கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து அமெரிக்க மற்றும் இந்திய விமானப்படை
விமானங்கள் இலங்கையை விட்டு வெளியேறின

Ditwah சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன. அனர்த்த நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக, டிசம்பர் 7 முதல் 13 வரையான காலத்திற்குள் இரண்டு அமெரிக்க விமானப்படை C-130J விமானங்கள் 60 Marines படையினருடன் இலங்கைக்கு வந்தடைந்தன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின்
சிறப்புப் படைவீரர்கள் ஆதரவு அளித்தனர்

புஸ்ஸல்லாவை  Frotoft தோட்டம் வரை போக்குவரத்து தடைபட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இலங்கை


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையில் மனிதாபிமான பணிக்காக இந்திய இராணுவத்தின் 60 வது கள மருத்துவமனைக்கு பாராட்டு

பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியை அடுத்து இந்திய இராணுவத்தின் 60 கள மருத்துவமனை வழங்கிய அனரத்த நிவாரண மருத்துவ உதவி, அதன் விதிவிலக்கான மனிதாபிமான தாக்கம் மற்றும் தொழில்முறை சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக 2025 டிசம்பர் 14 அன்று பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் பாராட்டு வழங்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதியில் இராணுவ படையினரின் உதவியுடன் நடைபெற்று வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, 2025 டிசம்பர் 13 மற்றும் 14ம் திகதிகளில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதிக்கு விஜயம் செய்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சினால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் மாரவில ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் ஒருங்கிணைப்பின் கீழ், பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை பொருட்கள் டிசம்பர் 12 அன்று இரண்டு வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிடைக்கப்பெற்ற ஒரு தொகை பொருட்கள் கந்தளாய் ஆதார
வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது

பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை உதவிப் பெருட்கள் இன்று (டிசம்பர் 13) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹேலிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி, வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது

இலங்கையின் ஓரு முன்னணி கையுறை உற்பத்தியாளரான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி (டிபிஎல்), நிறுவனம் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 பாதுகாப்பு கையுறைகளை நன்கொடையாக வழங்கியது.