பாதுகாப்பு செய்திகள்
“போர்வீரர்களின் பெருமை” திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் யுத்த வீரர் தொழில்முனைவோர்களுக்கான ஒரு நிகழ்ச்சி
'தேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வணிக தொடக்கத் திட்டங்களுக்கான பாதுகாப்பு பங்களிப்பு' குறித்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது 'Mission Reboot' என்ற திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களை தேசிய பொருளாதார மேம்பாட்டில் தொழில்முனைவோர்களாக ஆக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் ஒரு அம்சமாகும்.
மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 02 காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
துருக்கியின் 102வது குடியரசு தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும்
பாதுகாப்புச் செயலாளரும் கலந்துக் கொண்டனர்
துருக்கி குடியரசின் 102வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கையில் உள்ள துருக்கி குடியரசின் தூதரகம், அக்டோபர் 29 அன்று கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது.
பொது தின நிகழ்வில் போர் வீரர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்
போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 29) பொது தின நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
ஜப்பானிய JMSDF AKEBONO
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள ஜப்பானிய கடற்படைக் கப்பலான 'JMSDF AKEBONO' பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (அக்டோபர் 28) பார்வையிட்டனர்.
இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 28) உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ
விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்பு
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட RWP RSP VSV USP ndu psc PhD MSc (DM) MSc (NSWS) PGDM, நேற்று (அக்டோபர் 27) பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது
மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இன்று (2025 அக்டோபர் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர்
ஜெனரல் ருவன் வணிகசூரிய ஓய்வு பெறுகிறார்
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய (CNI) மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய இன்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலிலிருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்பு
அனர்த்தத்துக்குள்ளான INTEGRITY STAR (MV) எனும் வணிகக் கப்பலில் இருந்த பணியாளர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்பொன்றிற்கமைய விரைவாக செயல்பட்ட இலங்கை கடற்படையினர், குறித்த கப்பலில் இருந்த பணியாளர்களை அக்டோபர் 25ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டெடுத்த நிலையில் இன்று (அக்டோபர் 26,) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
வருடாந்த NCC பயிற்சி அணிவகுப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்
2025 ஆம் ஆண்டிற்கான Hermann Loos மற்றும் De Soysa Challenge விருதுகளுக்கான வருடாந்த அணிவகுப்பு முகாம் இன்று (அக்டோபர் 21) ரன்டம்பேயில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் DSSC தூதுக்குழு
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது
கேர்ணல் Brandon Wood தலைமையிலான அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியின் (DSSC) தூதுக்குழு, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக்டோபர் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தது.
அதிகாரமளிப்பு விழாவின் பாரம்பரிய பதவியேற்று விருந்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாசாலையில் நேற்று மாலை (அக்டோபர் 18) நடைபெற்ற விமானப்படையின் புதிதாக பதவியேற்று அதிகாரிகளுக்கான பாரம்பரிய பதவியேற்பு விருந்தில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார் .
இலங்கை விமானப்படை 3 ஆவது கடல்சார் படைப்பிரிவுக்கு
ஜனாதிபதியின் வர்ணம் வழங்கப்பட்டது
இலங்கை விமானப்படைக்கும் நாட்டிற்கும் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இலங்கை விமானப்படையின் 3ஆம் இலக்க கடல்சார் படைப்பிரிவுக்கு ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்டது.
KDU பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விருந்தில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பட்டமளிப்பு விழா விருந்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இவ் விழா நேற்று மாலை (அக்டோபர் 16) மொரட்டுவையில் உள்ள ரமாடியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவினால் அரச நிறுவனங்களுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவினால் பொது பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த துறைகளின் அதிகாரிகளுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அக்டோபர் 15 (2025) அன்று பத்தரமுல்லையில் உள்ள “சுஹுருபாய”வில் நடத்தப்பட்டது.
மிஹின்து செத் மெதுரவிற்கான விஜயத்தின் போது மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களுக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (அக்டோபர் 15) மிஹின்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயம் மாற்றுத்திறனாளி யுத்த வீரர்களின் நலன் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்தது.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பட்டமளிப்பு விழா BMICH இல் நடைபெற்றது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பொது பட்டமளிப்பு விழா நேற்று (அக்டோபர் 14) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
யுத்த வீரர்களின் நலனுக்கான பொது தின நிகழ்ச்சி
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடந்தது
யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான பாதுகாப்பு அமைச்சின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு பொது தின நிகழ்ச்சி, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்
இலங்கை இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இரண்டு நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.













