செய்திகள்
வருடாந்த இரத்ததான முகாமில் அமைச்சு ஊழியர்கள் இரத்ததானம் செய்தனர்
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வருடாந்த ரத்ததான முகாம் இன்று (ஒக்.19) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் அதிகளவான அமைச்சு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.
அனர்த்த நிவாரண பணிகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அம்பாறை விஜயம்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (நவம்பர் 28) அங்கு விஜயமொன்றை மேட்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை
பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (DMC) மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுடன் அவர் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை மற்றும் முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனர்த்த நிலைமை நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட மன்னார் விஜயம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட நேற்று (நவம்பர் 26) மாலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார்.
நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருக்கூடும்
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (நவம்பர் 26) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கைக்கமைய, இக்காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நேற்று (நவம்பர் 25) இரவு 11.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 290 கிலோமீற்றர் மற்றும் திருகோணமலைக்கு 410 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கே நிலைகொண்டுடிருந்தது.
53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர்
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர் 25) இடம்பெற்ற 53வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு)
கடமை ஏற்றார்
பாதுகாப்பு பிரதி அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அமைந்துள்ள தனது புதிய அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல
அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Tamil
Tamil
ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுட்டிப்பு
ஆயுதப்படையின் நினைவு தினம் - 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது.
Tamil
ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை
சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம்
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வருடாந்த ‘பொப்பி தின’ விழா ஜனாதிபதி தலைமையில்
நவம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் அதன் ஆயுதப்படை நினைவு தின பொப்பி குழுவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டும் பொப்பி தின விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், கௌரவ அதிதிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள யுத்த வீரர் நினைவு தூபியில் நவம்பர் 24 அன்று நடைபெறவுள்ளது.
கடற்படை CBRN பிரிவு கொழும்பு துறைமுகத்தில் கூட்டுப்
பயிற்சியை நடத்தியது
இலங்கை கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவு கடந்த செவ்வாயன்று (நவம்பர் 19) கொழும்பு துறைமுகத்தில் கூட்டு பயிற்சியை ஒன்றை நடத்தியது. மொன்டானா நேஷனல் கார்ட், அமெரிக்க கடலோர காவல்படை (மாவட்டம் 13) மற்றும் இலங்கையை விமானப்படை உடன் கூட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் Subject Matter Expert Exchange (SMEE) பரிமாற்ற நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களின் அறிவு மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு இக்கூட்டு பயிட்சி நடத்தப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான
தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான சர்வதேச குடியேற்ற அமைப்பின் (IOM) தூதுவர் கிறிஸ்டின் பி பார்கோ (Ms. Kristin B. Parco) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இன்று (நவம்பர் 20) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல்
சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மீண்டும் நியமனம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று (நவம்பர் 19) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க மரபுவழி இராணுவ முன்மாதிரிகளை
தாண்டி சிந்திக்கக்கூடிய தலைவர்கள் தேவை - பாதுகாப்பு செயலாளர்
"இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், காலநிலை மாற்ற தாக்கங்கள், பொருளாதார பாதுகாப்பு மற்றும் தகவல் போர் போன்றவை பாரம்பரிய இராணுவ சவால்களுடன் குறுக்கிடும் ஒரு சகாப்தத்தில் நாங்கள் வாழ்கிறோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், நமது பிரதேசம், உலகளாவிய கடல் வர்த்தகம் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க சந்தியில் அமைந்திருக்கிறது. எங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க மரபுவழி இராணுவ முன்மாதிரிகளை தாண்டி சிந்திக்கக்கூடிய தலைவர்கள் தேவை”.
‘JMSDF SAMIDARE’ கொழும்பு கொழும்பு வருகை
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் ‘JMSDF SAMIDARE’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை விமானப்படை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை விமானப்படையின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (AFESA) செயற்குழு பிரதிநிதிகள் இன்று (நவம்பர் 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சந்தித்தனர்.
COSATT இயக்குனர் பாதுகாப்பு செயலரை சந்தித்தார்
தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பின் (COSATT) பணிப்பாளர் கலாநிதி நிஸ்சல் என். பாண்டே, இன்று (நவ. 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
ஊடக அறிக்கை
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்ககள், மாகாண சபை உறுப்பினர்ககள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்த அதிகாரிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் தற்பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் மற்றும் ரவை துப்பாக்கிகள் குறிப்பிடத்தக்களவு உள்ளதை பாதுகாப்பு அமைச்சினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
Tamil
ஊடக அறிக்கை
மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு பல்வேறு வடிவங்களில் ஆட்சேர்ப்பது அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.