செய்திகள்
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இரங்கல் செலுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று காலை (ஏப்ரல் 25) வத்திகான் தூதரகத்திற்கு விஜயம் செய்து பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான நலன்புரி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கான நலன்புரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று மற்றும் இன்று (ஏப்ரல் 22 & 23) கண்டிக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை-கொரிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்
கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது.
Tamil
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிவுறுத்தியுள்ளார்.
புனித தந்த சிறப்பு கண்காட்சிக்கான ஏற்பாடுகளை
பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்
ஏப்ரல் 18 முதல் 27 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் புத்தரின் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சிக்கான ஆயத்த ஏட்பாடுகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா(ஓய்வு) இன்று (ஏப்ரல் 16) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
வாழ்த்துச் செய்தி
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம்.
ஊடக அறிக்கை
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துமுகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை முப்படை நிவாரணக் குழு மியான்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் மும்முரத்துடன் ஈடுபட்டு வருகிறது
முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, அண்மையில் மியான்மாரில் ஏட்பட்ட பூகம்பத்ததை தொடர்ந்து நடந்து வரும் அனர்த்த நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
புதிய பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பதவியேற்பு
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரியான பிரிகேடியர் ஏ.கே.டி. அதிகாரி, இன்று (ஏப்ரல் 09) சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் (MoD) உள்ள நிறுவனங்களின் நிர்வாக மட்டம் அல்லாத பணியாளர்களுக்கு 'Clean Sri Lanka' திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைச் பெற்றுக்கொள்ள நோக்கமாகக் கொண்ட தொடர் நிகழ்ச்சிகளின் முதல் கட்டம் இன்று (ஏப்ரல் 8) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கையின் பிரதி பாதுகாப்பு
அமைச்சரைச் சந்தித்தார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய போல் ஸ்டீபன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மியான்மரில் அனர்த்த நிவாரணப் பணிகளில்
இலங்கை முப்படைப் படையினர் மும்முரம்
மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடற்படை கப்பல் சஹ்யத்ரி வருகையுடன் இந்தியா-இலங்கை பாதுகாப்பு
ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டது
இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இந்த நிகழ்வு இணைந்திருப்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது நமது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் வளமான மற்றும் பாதுகாப்பான இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான நமது தலைவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணக் குழு
மியான்மாரை வந்தடைந்தது
மியன்மாருக்கான இலங்கையின் சிறப்பு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு, சனிக்கிழமை (ஏப்ரல் 05) யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அனர்த்த நிவாரண பணிகளுக்காக முப்படைகளின் சிறப்புக்
குழு மியான்மருக்கு சென்றது
சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.
இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன
அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள்
கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்
‘விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொறியாளர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கும் உதவிகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
‘இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய அமைவிடம் காரணமாக, பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் (MDA) கடல்சார் பாதுகாப்பு உத்தி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது’.





















