செய்திகள்
இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன
அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் போர் பொறியாளர்கள்
கருத்தரங்கு 2025 இல் சிறப்புரை நிகழ்த்தினார்
‘விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய சவால்களால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், தகவமைப்பு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது.’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) வியாழக்கிழமை (ஏப்ரல் 3) கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொறியாளர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கும் உதவிகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
‘இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய அமைவிடம் காரணமாக, பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் (MDA) கடல்சார் பாதுகாப்பு உத்தி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது’.
நல்லெண்ணப் விஜயம் மேட்கொண்டு ஜப்பான் JMSDF கப்பல்கள் கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு ஜப்பானிய கடற் படை (JMSDF) கப்பல்களான Bungo மற்றும் Etajima செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) இலங்கையை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தாய் வந்தடைந்த இக்கப்பல்களுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படையினால் வரவேற்பலிக்கப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் வரவு செலவு திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது
மார்ச் 21 அன்று பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வரவு செலவுத் திட்ட அமலாக்கம் தொடர்பான கூட்டமொன்று புதன்கிழமை (மார்ச் 26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம், ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வை மற்றும் தேசியக் கொள்கையுடன் வரவு செலவுத் திட்டத்தை ஒன்றிணைத்து செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட நடைபெற்றது.
புதிய NCC இயக்குனர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
தேசிய மாணவர் படையின் (NCC) புதிய இயக்குனர் பிரிகேடியர் ரஜித பிரேமதிலக்க, வியாழக்கிழமை (மார்ச் 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை சந்தித்தார்.
இலங்கை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கேர்னல் டெரன் வூட்ஸ், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொலும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் பங்களாதேஷில் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தை கொண்டாடியது
இலங்கையில் உள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் புதன்கிழமை (மார்ச் 26) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் பங்களாதேஷின் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தைக் கொண்டாடியது.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan இன்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
உலக வானிலை ஆராய்ச்சி தினம் - 2025 பாதுகாப்பு பிரதி
அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது
"Closing the Early Warning Gap, Together" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இந்த ஆண்டு உலக வானிலை ஆராய்ச்சி தினம், இன்று (மார்ச் 25) கொழும்பில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான்
தேசிய தினத்தைக் கொண்டாடியது
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் திங்கட்கிழமை (மார்ச் 24) கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை கொண்டாடியது.
இயற்கை அனர்த்த தரவு வெளியீடு தொடர்பான
'info - NDRSC' ஆரம்பிக்கப்பட்டது
முதல் முறையாக இயற்கை அனர்த்த தரவு வெளியீடு தொடர்பான 'info -NDRSC' அனர்த்த தரவு அமைப்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நிகழ்ந்த வைபவமொன்றில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இது நாட்டில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் குறித்த புள்ளிவிவரத் தரவைச் சேகரித்து வெளியிடும் தற்போதைய வழக்கமான செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க உதவும்.
NCC இன் புதிய பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் பிரிகேடியர் ரஜித்த பிரேமதிலக்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச் 24) சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட CDRD யின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) 9வது பணிப்பாளர் நாயகமாக கொமடோர் ஜானக்க குணசீல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல்
உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுவரும் 'Clean Sri Lanka' திட்டத்தின்
முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தேசிய 'Clean Sri Lanka' திட்டம் குறித்து அதன் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டத்தின் வெற்றிக்கு இவ் அமைச்சு எவ்வாறு திறம்பட பங்களிக்க முடியும் என்பதை ஆராயவும் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 21) ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி பாதுகாப்பு
பிரதி அமைச்சரை சந்தித்தார்
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (USINDOPACOM) அட்மிரல் Samuel Paparo, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (மார்ச் 20) சந்தித்தார்.
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (USINDOPACOM) அட்மிரல் Samuel Paparo, இன்று (மார்ச் 20) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
இந்து சமுத்திரத்தில் பிரான்ஸ் கூட்டுப் படை தளபதி
பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் Hugues Laine , புதன்கிழமை (மார்ச் 19) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
KDU-வில் புதிய துணை வேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) கடமைகளை ஏற்றுக்கொண்டார்
பிரிகேடியர் RKARP ரத்நாயக்க RSP USP psc, மார்ச் 14 (2025) அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) புதிய துணை வேந்தராக (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மகத்தான பங்களிப்பு
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு விசேட பங்களிப்பை வழங்கி வருகின்றது.